பதிவு செய்த நாள்
02 நவ2013
01:10
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 6,000 கோடி டாலராக குறையும் என, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்ற நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்குபற்றாக்குறை, 8,800 கோடிடாலராக உயர்ந்துள்ளது. இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதமாகும். இதை, நடப்பு 2013–14ம் நிதியாண்டில், 3.8 சதவீதமாக, அதாவது, நடப்பு கணக்கு பற்றாக்குறையை, 7,000 கோடி டாலராக குறைக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை, மதிப்பீட்டை விட, 1,000 கோடி டாலர் குறைந்து, 6,000 கோடி டாலராக குறையும் என, எதிர்பார்க்கப்படுவதாக, ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அரசு எடுத்த நடவடிக்கைகளால், ஏற்றுமதி உயர்ந்து, அன்னிய முதலீடுகள் அதிகரித்து
வருகிறது. எனினும் சென்ற அக்டோபரில், தங்கம் இறக்குமதி, சற்றே அதிகரித்து, 23.5 டன்னாக உயர்ந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி, வரும் 2014ம் ஆண்டு, மார்ச் வரை ஏறுமுகமாகவே இருக்கும். நாட்டின் பணவீக்கமும் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என, அவர் மேலும் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|