பதிவு செய்த நாள்
13 நவ2013
00:11
சென்னை,: நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 168 ரூபாய் அதிகரித்து, 23,072 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து, கடந்த மாதம், 31ம் தேதிக்கு பின், ஒரு சவரன் தங்கம் விலை, மீண்டும், 23 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.சர்வதேச அளவில், தங்கம் விலை உயர்ந்து வருவதை அடுத்து, உள்நாட்டில், இதன் விலை அதிகரித்து காணப்படுகிறது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 2,863 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,904 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,325 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 21 ரூபாய் உயர்ந்து, 2,884 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சவரனுக்கு, 168 ரூபாய் அதிகரித்து, 23,072 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 215 ரூபாய் உயர்ந்து, 30,540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 51.90 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 48,460 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|