பதிவு செய்த நாள்
13 நவ2013
00:48
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்றும் சுணக்கமாகவே இருந்தது. பொது பணவீக்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தி புள்ளிவிவரங்கள் குறித்த எதிர்பார்ப்பால், சில்லரை முதலீட்டாளர்கள் நிறுவனப் பங்குகளில் முதலீடு மேற்கொள்வதில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டனர்.
இதன் காரணமாக, 'சென்செக்ஸ்', மற்றும் 'நிப்டி' முறையே, 1.02 சதவீதம் மற்றும் 1 சதவீதம் சரிவுடன் டிவடைந்தன.ஐரோப்பிய நாடுகளிலும், பங்கு வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. அதேசமயம், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
நேற்றைய பங்கு வியாபாரத்தில், நுகர்பொருட்கள், மருந்து ஆகிய நிறுவனப் பங்குகளை தவிர்த்து, ஏனைய அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 209.05 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 20,281.91 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 20,584.22 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 20,262.22 புள்ளிகள் வரையிலும் சென்றது.தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 60.75 புள்ளிகள் சரிவடைந்து, 6,018.05 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,108.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,011.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
சில்லரை பணவீக்கம்: 10.09 சதவீதம் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் சில்லரை பணவீக்கம், சென்ற அக்டோபரில், 10.09 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, சென்ற செப்டம்பர் மாதத்தில், 9.84 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், இது, 9.9 சதவீதமாக இருந்தது என, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உணவுப் பொருள் பணவீக்கம், சென்ற அக்டோபரில், 12.56 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மாதத்தில், 11.44 சதவீதமாக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|