பதிவு செய்த நாள்
18 நவ2013
00:37
மும்பை,: டப்பாண்டு நவம்பர் 1ம் தேதி வரையிலுமாக, வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், ஒட்டு மொத்த அளவில், 55,56,078 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 47,55,635 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், 16.83 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி ெவளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று மாதங்களாக, நிறுவனங்கள் அவற்றின் தேவைக்காக, வங்கிகளில் கடன் பெறுவது சிறப்பான அளவில் உயர்ந்து வருகிறது.
இதையடுத்து, வங்கிகள் வழங்கும் உணவு சாரா கடன், 17 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. இதே காலத்தில், வங்கிகள் திரட்டிய ஒட்டு மொத்த டெபாசிட், 15.41 சதவீதம் வளர்ச்சி கண்டு, 64,33,563 கோடி ரூபாயிலிருந்து, 74,25,167 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதில், குறித்த கால டெபாசிட், 15.58 சதவீதம் உயர்ந்து, 58,38,939 கோடியிலிருந்து, 67,48,518 கோடி ரூபாயாகவும், டிமாண்ட் டெபாசிட், 13.80 சதவீதம் அதிகரித்து, 5,94,623 கோடி ரூபாயிலிருந்து, 6,76,653 கோடி ரூபாயா கவும் வளர்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|