பதிவு செய்த நாள்
18 நவ2013
17:42
மும்பை : வாரத்தின் முதல்நாளில் அமெரிக்க மற்றும் ஆசிய பங்குசந்தைகள் கொடுத்த ஒத்துழைப்பு, இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம், முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்கியது போன்ற காரணங்களால் சென்செக்ஸ் 451 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தன. கடந்த ஒரு மாதத்தில் சென்செக்ஸ் இந்தளவு உயர்வது இதுவே முதல்முறையாகும்.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 451.32 புள்ளிகள் உயர்ந்து 20,850.75-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 132.85 புள்ளிகள் உயர்ந்து 6,189.00-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 26 பங்குகள் விலை ஏற்றத்தில் முடிந்தன. குறிப்பாக ஐடிசி., எச்.டி.எப்.சி., எல்அண்டி, இன்போசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., பெல், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|