வெங்காயம் ரூ.100ஐ எட்டும்வெங்காயம் ரூ.100ஐ எட்டும் ... ரூபாய் மதிப்பு ஒரே நாளில்70 காசுகள் அதிகரிப்பு ரூபாய் மதிப்பு ஒரே நாளில்70 காசுகள் அதிகரிப்பு ...
நிதி­ய­மைச்­சக கொள்­கைக்கு எதி­ராக... தங்க காசு விற்­ப­னையில் இறங்கும் அஞ்சல் துறை :
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2013
00:30

புது­டில்லி: இந்­திய அஞ்சல் துறை, நாடு முழு­வதும் உள்ள அதன் அஞ்­ச­ல­கங்­களில், தங்க காசு­களை விற்­பனை செய்ய திட்­ட­மிட்­டுஉள்­ளது. தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்­நுட்ப அமைச்­ச­கத்தின் கீழ் செயல்­படும் அஞ்சல் துறை, தங்க காசுகள் சப்­ளைக்­கான ஒப்­பந்த புள்­ளியை கோரி­யுள்­ளது.
பெரும் சர்ச்சை:பொதுத் துறை வங்­கிகள் தங்க காசுகள் மற்றும் பதக்கங்களை விற்­பனை செய்ய மத்­திய நிதி­ ­அமைச்­சகம் தடை விதித்­துள்­ளது.இந்­நி­லையில், மத்­திய அரசின் ஓர் அங்­க­மான, தேசிய அஞ்சல் துறை, தங்க காசு­களை விற்­பனை செய்­ய இருப்­பது, பெரும் சர்ச்­சையை கிளப்­பி­யுள்­ளது.இதன் மூலம், மத்­திய அரசின் இரு அமைச்­ச­கங்­க­ளுக்கு இடை­யில் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.சென்ற 2012–13ம் நிதி­யாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­ குறை, 8,800 கோடி டால­ராக அதி­க­ரித்­தது. இதற்கு, 5,800 கோடி டாலர் மதிப்­பி­லான, 850 டன் தங்கம் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டதும் ஒரு காரணம் என, நிதி­ய­மைச்­சகம் கரு­தி­யது.ஆகவே, தங்கம் இறக்­கு­ம­தியை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில், பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை விதித்­தது.
முக்­கி­ய­மாக, தங்கம் மீதான இறக்­கு­மதி வரி, 10 சத­வீ­த­மா­கவும், ஆப­ர­ணங்­க­ளுக்­கான சுங்க வரி, 15 சத­வீ­த­மா­கவும் அதி­க­ரிக்­கப்­ பட்­டது.மேலும், இறக்­கு­ம­தி­யாகும் தங்­கத்தில், 20 சத­வீதம், மதிப்பு கூட்­டப்­பட்ட பொருட்­க­ளாக ஏற்­று­மதி செய்­யப்­பட வேண்டும் எனவும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.இத்­துடன், பொதுத்­துறை வங்­கிகள், தங்க காசுகள், பதக்­கங்கள் ஆகி­ய­வற்றை விற்­பனை செய்­வ­தற்கும், ரிசர்வ் வங்கி, தடை விதித்­தது.இது போன்ற நட­வ­டிக்­கை­களால், தங்கம் இறக்­கு­மதி, வெகு­வாக குறைந்­துள்­ளது.சென்ற மே மாதம், 162 டன் தங்கம் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது.
இறக்குமதி:மத்­திய அரசின் நட­வ­டிக்­கை­களால், ஜூலை, ஆகஸ்ட், செப்­டம்பர் மற்றும் அக்­டோபர் மாதங்­களில், தங்கம் இறக்­கு­மதி, முறையே, 47.75 டன், 3.38 டன், 11.16 டன் மற்றும் 23.5 டன் என்ற அளவில் குறைந்­துள்­ளது.
இதை­ய­டுத்து, நடப்பு நிதி­ஆண்டில், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, இலக்கை ( 7,000 கோடி டாலர்) விட, 1,000 கோடி டாலர் குறைந்து, 6,000 கோடி டால­ராக சரி­வ­டையும் என, மத்­திய நிதி­ய­மைச்சர் ப.சிதம்­பரம் தெரி­வித்தார்.ஆனால், நிதி­ய­மைச்சர் கூறி­யதை விட, நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, மேலும் 400 கோடி டாலர் குறைந்து, 5,600 கோடி டால­ராக வீழ்ச்சி காணும் என, ரிசர்வ் வங்­கியின் கவர்னர் ரகுராம் ராஜன், அண்­மையில் கூறினர்.
ஒப்பந்த புள்ளி:இவர்­களின் நம்­பிக்­கையை தகர்க்கும் விதத்தில், தங்க காசுகள் சப்­ளைக்­காக, அஞ்சல் துறை, கடந்த 6ம் தேதி வெளி­யிட்­டுள்ள ஒப்­பந்த புள்ளி அமைந்­துள்­ளது. வரும் 27ம் தேதி வரை, வர்த்­த­கர்கள், ஒப்­பந்த புள்­ளி கோரி விண்­ணப்­பிக்­கலாம் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.இணை­ய­தள பயன்­பாடு அதி­க­ரித்த பின்னர், அஞ்சல் அட்டை, தந்தி, மணி­யார்டர் உள்­ளிட்­ட­வற்றின் வாயி­லான வரு­வாயை, தேசிய அஞ்சல் துறை இழந்து விட்­டது.வருவாய் பெருக்கம்தற்­போது, கட்­டண சேவை­க­ளையே இலக்­காக கொண்டு செயல்­படும் தேசிய அஞ்சல் துறை, அதன் வரு­வாயை பெருக்கும் நோக்­குடன், தங்க காசுகள் விற்­ப­னையில் இறங்க உள்­ளது. இதற்கு, நிதி­ய­மைச்­சகம் இட­ம­ளிக்­குமா, இல்­லையா என்­பது விரைவில் தெரிந்து விடும்.அஞ்சல் துறை, வங்கித் துறையில் கால் பதிக்­கவும் திட்­ட­மிட்­டுள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
பிர­த­ம­ருக்கு கடிதம்:‘‘தங்க காசு­களை விற்க, பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அஞ்சல் துறைக்கு மட்டும் அனு­மதி வழங்­கி­யது எப்­படி?’’, என, இந்­திய கம்­யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் எஸ். சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்­பி­யுள்ளார். இது­கு­றித்து, விளக்கம் அளிக்­கு­மாறு அவர் பிர­த­ம­ருக்கு கடிதம் எழு­தி­யுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)