ஐ.டி., துறை ஐ.டி., துறை ஏற்றுமதி 8,600 கோடி டாலராக உயரும்ஏற்றுமதி 8,600 கோடி டாலராக உயரும்ஐ.டி., துறை ஐ.டி., துறை ஏற்றுமதி 8,600 கோடி டாலராக உயரும்ஏற்றுமதி 8,600 கோடி டாலராக ... ... 10 நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகம்: இந்தியா தீவிரம் 10 நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகம்: இந்தியா தீவிரம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எல்.ஐ.சி., 14 காப்பீட்டு திட்டங்களின் விற்பனையை நிறுத்துகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2013
05:07

பொதுத் துறையைச் சேர்ந்த லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.,), அதன் ஜீவன் மித்ரா, அன்மோல் ஜீவன் உள்ளிட்ட, 14 ஆயுள் காப்பீட்டு திட்டங்களின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.இவற்றில், கன்வர்ட்டபில் டெர்ம் அஸ்யூரன்ஸ், சில்ட்ரன் டிபர்டு எண்டோவ்மென்ட் அஸ்யூரன்ஸ் உள்ளிட்ட, 7 காப்பீட்டு திட்டங்களின் விற்பனை, கடந்த, 16ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (இரிடா) உத்தரவிட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன. இவற்றை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பின்பற்றுவதற்கான காலக்கெடு, வரும், டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து, ஆயுள் காப்பீட்டு துறையை சேர்ந்த பல நிறுவனங்கள், அவற்றின் பழைய காப்பீட்டு திட்டங்களை திரும்பப் பெற்று வருகின்றன. புதிய விதிமுறைகளின்படி, காப்பீட்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.இதன்படி, எல்.ஐ.சி., நிறுவனத்தின், ஜீவன் மித்ரா, ஜீவன் பராமுக், பீமா அக்கவுண்ட் 1 மற்றும் 2 ஆகிய திட்டங்கள் கடந்த, 23ம் தேதி, திரும்பப் பெறப்பட்டன. நடப்பு நவம்பர், 30ம் தேதியுடன், புதிய ஜீவன் நிதி மற்றும் அன்மோல் ஜீவன் 1 ஆகிய திட்டங்கள் நிறுத்தப்படுகின்றன.
குழு காப்பீடு செய்துள்ளவர்கள், விரும்பினால், நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள மேம்படுத்தப்பட்ட குழு காப்பீட்டு திட்டங்களுக்கு மாறலாம்.நடப்பு, 2013 – 14ம் நிதியாண்டின், ஏப்., – செப்., வரையிலான அரையாண்டில், எல்.ஐ.சி., நிறுவனத்தின், காப்பீட்டு பிரிமியம் வசூலில், 7 சதவீத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் பிரிமியம் வருவாய், 7.26 சதவீதம் அதிகரித்து, 37,906 கோடி ரூபாயாக உள்ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)