பதிவு செய்த நாள்
26 நவ2013
01:13
புதுடில்லி:ஒடிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், 8,000 மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்தை மேற்கொள்ள, டாட்டா பவர், அதானி பவர், வேதாந்தா குழுமம், என்.டி.பி.சி., உள்ளிட்ட, 12 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.ஒடிசா:தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 4,000 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைய உள்ளது. இதே போன்று, ஒடிசாவிலும், 4,000 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான, விண்ணப்பங்கள், தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் கோரப்பட்டன.
இதையடுத்து, பொதுத் துறையை சேர்ந்த பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (பி.எப்.சி.,) நிறுவனத்திடம், மேற்கண்ட இரு திட்டங்கள் தொடர்பாக, 12 நிறுவனங்கள் விண்ணப்பங்களை அளித்துள்ளன.இதில், ஏழு நிறுவனங்கள், செய்யூர் அனல் மின் திட்டத்திற்கும், ஐந்து நிறுவனங்கள், ஒடிசா அனல் மின் திட்டத்திற்கும் விண்ணப்பித்துள்ளன.நேற்றுடன் ஒடிசா திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்பு முடிவுஅடைந்தது. வரும், 28ம் தேதியுடன், செய்யூர் திட்டத்திற்கு விண்ணப்பம்செய்வதற்கான ‘கெடு’ முடிவடைகிறது.பரிசீலனை:இதையடுத்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். அதன் பின்னர், அந்நிறுவனங்களிடம், திட்டச் செலவு குறித்த, ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, விதிமுறைகளின் படி, திட்டப் பணி ஒப்படைக்கப்படும் என, பி.எப்.சி., நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|