பதிவு செய்த நாள்
27 நவ2013
00:08
புதுடில்லி: நடப்பாண்டு, ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஆறு மாதங்களில், 3,000 கோடி ரூபாய் கறுப்பு பணம் சிக்கியுள்ளது.மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும், மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு (சி.இ.ஐ.பீ.,) வரி ஏய்ப்பு, கறுப்பு பணம் உள்ளிட்ட நிதி சார்ந்த குற்றங்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.இந்த அமைப்பு, கடந்த ஜூலை வரையிலான ஆறுமாதங்களில், நாடு முழுவதும், நடத்திய கறுப்பு பண வேட்டையில், 3,000 கோடி ரூபாய் கறுப்பு பணம் சிக்கியுள்ளது. மேலும், 384 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி வரி, சுங்க வரி, சேவை வரி ஏய்ப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மேற்கண்ட குற்றங்கள் தொடர்பாக, 174 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|