6 மாதங்­களில் ரூ.3,000 கோடிகறுப்பு பணம் சிக்­கி­யது6 மாதங்­களில் ரூ.3,000 கோடிகறுப்பு பணம் சிக்­கி­யது ... பி.சி.சி., அமைப்புக்கு  எதி­ராக பல்­லடத்தில் புதிய கறிக்­கோழி பண்­ணை­யாளர் குழு உதயம் பி.சி.சி., அமைப்புக்கு எதி­ராக பல்­லடத்தில் புதிய கறிக்­கோழி பண்­ணை­யாளர் ... ...
ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதியில் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2013
00:09

புது­டில்லி: நடப்பு 2013–14ம் நிதி­யாண்டின் ஏப்ரல் முதல் அக்­டோபர் வரை­யி­லான ஏழு மாத காலத்தில், நாட்டின் ஆப­ர­ணங்கள் மற்றும் நவ­ரத்­தி­னங்கள் ஏற்­று­மதி, ரூபாய் மதிப்பின் அடிப்­ப­டையில், 1,24,508 கோடி­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது. சுங்கவரிஇது, கடந்த நிதி­ஆண்டின் இதே காலத்தில், 1,22,461 கோடி ரூபா­யாக இருந்­தது. ஆக, கணக்­கீட்டு காலத்தில், மேற்­கண்­ட­வற்றின் ஏற்­று­மதி, 1.67 சத­வீதம் வளர்ச்சி கண்­டுள்­ளது என, இந்­திய நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி மேம்­பாட்டு கவுன்­சிலின் தற்­கா­லிக புள்­ளி­வி­வ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.அதே­ச­மயம், மதிப்­பீட்டு காலத்தில், இவற்றின் ஏற்­று­மதி,டாலர் மதிப்பின் அடிப்­ப­டையில், 6.67 சத­வீதம் சரி­வ­டைந்து, 2,244 கோடி டால­ரி­லி­ருந்து, 2,094 கோடி டால­ராக குறைந்­துள்­ளது.குறிப்­பாக, சென்ற அக்­டோ­பரில் மட்டும், நாட்டின் நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி, ரூபாய் மதிப்பின் அடிப்­ப­டையில், 41.58 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 14,691 கோடி­யி­லி­ருந்து, 20,800 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
வைரங்கள் ஏற்­று­மதிமேலும், டாலர் மதிப்பின் அடிப்­ப­டை­யிலும், இவற்றின் ஏற்­று­மதி, 21.82 சத­வீதம் என்ற அளவில் சிறப்­பாக வளர்ச்சி கண்டு, 277 கோடி டால­ரி­லி­ருந்து, 338 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.நடப்பு நிதி­யாண்டின் ஏப்ரல் முதல் அக்­டோபர் வரை­யி­லான ஏழு மாத காலத்தில், நறுக்­கப்­பட்ட மற்றும் பட்டை தீட்­டப்­பட்ட வைரங்கள் ஏற்­று­மதி, ரூபாய் மதிப்பின் அடிப்­ப­டையில், 49.61 சத­வீதம் அதி­க­ரித்து, 49,664 கோடி­யி­லி­ருந்து, 74,301 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது. மேலும், அளவின் அடிப்­ப­டையில் இதன் ஏற்­று­மதி, 195.79 லட்சம் காரட்­டி­லி­ருந்து, 222.01 லட்சம் காரட்­டாக உயர்ந்­து உள்­ளது.அதே­ச­மயம், கணக்­கீட்டு காலத்தில், தங்க ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி, ரூபாய் மதிப்பின் அடிப்­ப­டையில், 50.81 சத­வீதம் சரி­வ­டைந்து, 47,867 கோடி­யி­லி­ருந்து, 23,546 கோடி ரூபா­யாக வீழ்ச்சி கண்­டுள்­ளது.மத்­திய அரசு, தங்கம் இறக்­கு­ம­திக்கு விதித்­துள்ள கட்­டுப்­பா­டு­களால் தான், நாட்டின் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி வீழ்ச்சி கண்­டுள்­ளது என, இத்­து­றையைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் கருத்து தெரி­வித்­துள்­ளனர்.
இதே போன்று, கணக்­கீட்டு காலத்தில், தங்க பதக்­கங்கள் மற்றும் காசுகள் ஏற்­று­ம­தியும், 34.27 சத­வீதம் சரி­வ­டைந்து, 16,711 கோடி­யி­லி­ருந்து, 10,984 கோடி ரூபா­யாக வீழ்ச்சி கண்­டுஉள்­ளது.நவரத்தினங்கள்அதே­ச­மயம், நவ­ரத்­தின கற்கள் ஏற்­று­மதி, மதிப்­பீட்டு காலத்தில், 126.58 சத­வீதம் என்ற அளவில் சிறப்­பாக வளர்ச்சி கண்டு, 928 கோடி­யி­லி­ருந்து, 2,102 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது.இதே போன்று, வெள்ளி ஆப­ர­ணங்கள் ஏற்­று­ம­தியும்,129.44 சத­வீதம் அதி­க­ரித்து, 2,276 கோடி­யி­லி­ருந்து, 5,222 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது என, இக்கவுன்­சில் புள்­ளி­வி­வ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)