பதிவு செய்த நாள்
29 நவ2013
13:45
புதுடில்லி:பெண்களுக்கென்றே பிரத்யேகமான, பாரதிய மகிளா வங்கி, அடுத்த நான்கு மாதங்களில், மேலும், 16 கிளைகளை துவக்க உள்ளது.முழுவதும் பெண்களே நிர்வகிக்கும், பெண்களுக்கான முதலாவது வங்கியை, கடந்த, 19ம் தேதி மும்பையில், பிரதமர், மன்மோகன் சிங் துவக்கிவைத்தார். பாரதிய மகிளா வங்கி என்ற பெயரிடப்பட்ட இந்த வங்கியின் கிளைகள், ஏழு முக்கிய நகரங்களில் துவக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வங்கியின் மேலும் 16 கிளைகள், நான்கு மாதத்தில் துவக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, இதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், உஷா அனந்தசுப்ரமணியன் நேற்று தெரிவித்தார். இதில், இரண்டு வங்கி கிளைகள், அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவக்கி வைக்கப்படுகிறது. புதிதாக வரவிருக்கும், மாநில தலைநகரங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் துவக்கி வைக்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் கிராமங்களிலும், வங்கிகளே இல்லாத இடங்களில் அமைக்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|