பதிவு செய்த நாள்
10 டிச2013
03:02
ஊட்டி: உலக நாடுகளில், தேயிலைக்கு கிராக்கி குறைந்துள்ளதால், நீலகிரிதேயிலையை, விலை குறைவாக விற்க வேண்டிய நிலைக்கு வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.தேக்கம்நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும், தேயிலை துாள், வாரந்தோறும், குன்னுார் தேயிலை வர்த்தகர்கள் சங்க, ஏல மையம் மூலம் விற்கப்படுகிறது.இந்தாண்டின், 49வது ஏலம் நேற்று நடந்தது. விற்பனைக்கு வந்த, 17 லட்சம் கிலோ தேயிலை துாளில், 82 சதவீத தேயிலை துாள் விற்று தீர்ந்தது.
ஆனாலும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கிலோவுக்கு, இரண்டு ரூபாய் குறைவாகவே, தேயிலை துாள் விற்கப்பட்டது. உலக சந்தையில், தேவைக்கேற்ற தேயிலை துாள் இருப்பதால், உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள், குன்னுார் தேயிலை ஏலத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், தேக்கத்தை தவிர்க்க, தேயிலை துாள் விலையை, குறைத்து விற்க வேண்டிய நிலைக்கு, வர்த்தகர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.தேயிலை ஏல நிலவரம் குறித்து, சர்வதேச
நிர்வாக இயல் ஆலோசகர் சுந்தர் கூறியதாவது:குன்னுார் தேயிலை ஏற்றுமதி வர்த்தகத்தை பொறுத்தவரை, பாகிஸ்தான், ரஷ்ய வர்த்தர்கள் மட்டுமே, தற்போது ஏலத்தில் பங்கேற்கின்றனர். வெளிநாடு களுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யும், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா உட்பட, வட மாநில வர்த்தகர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்த்து வருகின்றனர்.வர்த்தகர்கள்இந்த வார ஏலத்தில், ஒரு கிலோ தேயிலை துாளின் சராசரி விலை, 73 ரூபாயாக இருந்தது; இது, மிகக் குறைந்த விலை. இப்படி, விலை குறைத்து விற்கப்படுவதால், கணிசமான அளவு தேயிலை துாளை வர்த்தகர்கள் வாங்குகின்றனர். இந்த அடிப்படையில், கடந்த வாரம், ஒன்பது கோடி ரூபாய்க்கும், இந்தவாரம், 10 கோடி ரூபாய்க்கும் வர்த்தகம் நடந்தது. இவ்வாறு சுந்தர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|