பதிவு செய்த நாள்
19 டிச2013
17:44
மும்பை : வாரத்தின் நான்காம் நாள் துவக்கத்தில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த இந்திய பங்குசந்தைகள் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அதிர்ச்சியை கொடுத்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 157.59 புள்ளிகளும், நிப்டி 46.60 புள்ளிகள் உயர்ந்து இருந்த நிலையில், அமெரிக்காவின் பெடரல் வங்கி, சுமார் 75 பில்லியன் டாலர் அளவுக்கு பாண்டு பத்திரங்கள் வாங்குவதை குறைப்பதாக அறிவித்ததன் எதிரொலி மற்றும் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை விற்க தொடங்கியது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் சரிவடைய தொடங்கின. இதனால் வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 151.24 புள்ளிகளும், நிப்டி 50.50 புள்ளிகள் சரிந்து 6,166.65-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 19 நிறுவன பங்குகளின் விலை சரிந்தும், 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ, எஸ்பிஐ., ஐடிசி., எச்டிஎப்சி, ஹீரோ மோட்டோ கார்ப், எல்அண்ட்டி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|