2 நாட்களில் தங்கம்சவரனுக்கு ரூ.216 வீழ்ச்சி2 நாட்களில் தங்கம்சவரனுக்கு ரூ.216 வீழ்ச்சி ... ஏற்றுமதிக்கான வெங்காயத்தின்விலை 350 டாலராக குறைப்பு ஏற்றுமதிக்கான வெங்காயத்தின்விலை 350 டாலராக குறைப்பு ...
ஹாங்காங் வழியாக இந்தியாவுக்கு வரும் தங்க நகைகள்: வர்த்தகர்கள் புதிய உத்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2013
00:39

இந்திய நகை வியாபாரிகள், தற்போது, ஹாங்காங் வழியாக, தங்கம் மற்றும் தங்க நகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளனர்.
இந்தியா – ஹாங்காங் இடையே, தாராள வர்த்தக ஒப்பந்தம் அமலில் உள்ளதால், தங்க நகைகளின் மதிப்பை கூட்டிக் காட்டி, சுங்க வரியின்றி இறக்குமதி செய்து, வியாபாரிகள் லாபம் பார்த்து வருகின்றனர்.
இறக்குமதி வரி: இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத, முன்னணி நகை நிறுவன தலைவர் ஒருவர் கூறியதாவது:தங்கத்திற்கான இறக்குமதி வரி, தாங்க முடியாத அளவிற்கு, 10 சதவீதமாக உயர்த்தப்பட்டு விட்டது. தங்க நகைகளின் இறக்குமதி வரியும், 10 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், 2.5 – 3 சதவீதம் என்ற அளவில், லாப வரம்பை கொண்டுள்ள நகை வியாபாரிகள் என்ன செய்வார்கள்?வியாபாரத்தை தொடர்வதற்கு வேறு வழியின்றி, மாற்று வழியை கண்டுபிடித்துள்ளனர்.
அது மட்டுமின்றி, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாகவும், நகை தயாரிப்பு நிறுவனங்களின் மூலப் பொருள் செலவினம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதனிடையே, ஹாங்காங்கில் இருந்து, அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்ட 6 தங்க நகை பார்சல்களை, சுங்கத் துறை, பறிமுதல் செய்துள்ளது. இந்த நகைகளின் உண்மையான மதிப்பு குறித்து, மறு ஆய்வு செய்து தெரிவிக்குமாறு, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பிடம் (ஜி.ஜே.இ.பி.சி.,) கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இக்கூட்டமைப்பை சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று, கோல்கட்டா மற்றும் டில்லிக்கு சென்று, நகை பார்சல்களை மதிப்பீடு செய்தது. அதில் சில முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வருவாய் புலனாய்வு துறைக்கு, முறைகேடுகள் தொடர்பான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என, பெயர் குறிப்பிட விரும்பாத, ஜி.ஜே.இ.பி.சி., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நடப்பு ஆண்டில், சென்ற அக்டோபருடன் முடிந்த ஒன்பது மாதங்களில், இந்தியா – ஹாங்காங் இடையிலான பரஸ்பர வர்த்தகம், 6.9 சதவீதம் உயர்ந்து, 1,690 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
பரஸ்பர வர்த்தகம்: இதே காலத்தில், ஹாங்காங்கில் இருந்து, 800 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஹாங்காங்கிற்கு, நான்காவது மிகப் பெரிய ஏற்றுமதி நாடாகவும்; இறக்குமதியில், ஏழாவது நாடாகவும், இந்தியா விளங்குகிறது. இரு நாடுகளின் பரஸ்பர வர்த்தக மதிப்பில், தங்க நகைகளின் பங்கு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)