ரபி பருவ பயிர் சாகுபடி பரப்பு 6 சதவீதம் அதிகரிப்புரபி பருவ பயிர் சாகுபடி பரப்பு 6 சதவீதம் அதிகரிப்பு ... பட்டு நூலிழை விலை உயர்வால் கோரா பட்டு சேலை நெசவாளர்கள் பாதிப்பு பட்டு நூலிழை விலை உயர்வால் கோரா பட்டு சேலை நெசவாளர்கள் பாதிப்பு ...
வரத்து அதிகரிப்பால் மிளகு விலை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2013
00:22

திருவனந்தபுரம்:உள்நாட்டு சந்தையில், மிளகு வரத்து அதிகரிப்பால், அதன் விலை சரிவடைந்துள்ளது. கடந்த நவம்பரில், இதுவரை காணாத அளவில், ஒரு கிலோ மிளகு, 525 – 530 ரூபாயாக உயர்ந்தது.
சந்தை:இந்நிலையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,), அதன் கையிருப்பில் இருந்து, 400 டன் மிளகை, சந்தைக்கு அனுப்பிஉள்ளது.அதே சமயம், உள்நாட்டில், மிளகிற்கான தேவையும் குறைந்து உள்ளது. இதனால், ஒரு கிலோ மிளகு விலை, 490 – 500 ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது.கடந்த ஆண்டு, கலப்பட மிளகு அதிக அளவில் சந்தையில் புழங்குவது தெரியவந்தது.
க்ஷஇதையடுத்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எடுத்த அதிரடி நடவடிக்கையால், 6,800 டன் மிளகு பறிமுதல் செய்யப்பட்டது.அவற்றில், கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த கையிருப்பில் இருந்து, கலப்படம் இல்லை என்ற சான்று பெற்ற, 400 டன் மிளகு, மீண்டும் சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சந்தையில் மிளகு வரத்து அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரித்து, விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் உள்ளனர். அதனால், மிளகிற்கான தேவை குறைந்துள்ளது.அதே சமயம், ஓலியோரெசின் நிறுவனங்கள், சந்தையை எதிர்பார்க்காமல், விவசாயிகளிடம் நேரடியாக, ஒரு கிலோ, 560 – 570 ரூபாய் என்ற விலையில், மிளகை கொள்முதல் செய்து வருவதாக, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.சர்வதேச சந்தையில், நடப்பாண்டு, மிளகு சப்ளை குறையும் என்ற மதிப்பீடு காரணமாக, மேற்கண்ட நிறுவனங்கள், விவசாயிகளிடம் நேரடி யாக மிளகை கொள்முதல் செய்து வருவதாக, அவர்கள் மேலும் கூறினர்.சென்ற ஆண்டை விட, நடப்பாண்டு, சர்வதேச மிளகு உற்பத்தி, 10,258 டன் குறைந்து, 3,27,090 டன்னில் இருந்து, 3,16,832 டன்னாக சரிவடையும் என, சர்வதேச மிளகு கூட்டமைப்பு (ஐ.பி.சி.,) மதிப்பிட்டுள்ளது.
கையிருப்பு:கடந்த, 2011ம் ஆண்டு, உலக அளவில், 3,17,750 டன் மிளகு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் மிளகு உற்பத்தி, வரும், 2014ம் ஆண்டு, 13 ஆயிரம் டன் குறைந்து, 45 ஆயிரம் டன்னாக வீழ்ச்சி காணும் என, ஐ.பி.சி., கணித்துள்ளது.இது, நடப்பாண்டிலும், 45 ஆயிரம் டன்னாகவே இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன், கடந்த ஆண்டின், 9,760 டன் கையிருப்பையும் சேர்த்து, மொத்தம், 54,760 டன் மிளகு, வரத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தொடர் மழை, பூச்சித் தாக்குதல் உள்ளிட்டவை காரணமாக, உள்நாட்டில் மிளகு உற்பத்தி குறைந்து உள்ளது.மிளகு உற்பத்தியில், வியட்னாம் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)