வரத்து அதிகரிப்பால் மிளகு விலை சரிவுவரத்து அதிகரிப்பால் மிளகு விலை சரிவு ... விரைவில் ‘ஆர்’ குறியீட்டுடன்புதிய 10 ரூபாய் நோட்டு விரைவில் ‘ஆர்’ குறியீட்டுடன்புதிய 10 ரூபாய் நோட்டு ...
பட்டு நூலிழை விலை உயர்வால் கோரா பட்டு சேலை நெசவாளர்கள் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2013
00:26

கோபி:கோரா பட்டு நுாலிழை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டு புடவை உற்பத்தியாளர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம்:ஈரோடு மாவட்டம் நம்பியூர், அந்தியூர், சத்தியமங்கலம், டி.ஜி.புதுார், வாணிப்புத்துார், சாவக்காட்டுபாளையம் பகுதியில், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோரா பட்டு நெசவாளர்கள் உள்ளனர்.கோரா பட்டு சேலை உற்பத்தியில், டிசைனர், பாவு நெய்பவர்கள், வண்ணம் தீட்டுபவர்கள், நெசவாளர்கள் என, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.தினமும், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிற்கான, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இறக்குமதி வரி:நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், பட்டு நுாலிழைக்கான இறக்குமதி வரி, 5 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.வரி உயர்வுக்குப்பின், பட்டு நுாலிழை விலை, பல மடங்கு உயரத் துவங்கி உள்ளதால், பட்டு சேலை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.பட்டு நுாலிழை இறக்குமதி வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என, தமிழகம் முழுவதும், கோரா பட்டு நெசவாளர்கள், ஒரு வார காலம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோரா பட்டு உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதி கோவிந்தராஜ் கூறியதாவது:இறக்குமதி வரி உயர்வால், 2,000 ரூபாயாக இருந்த, ஒரு கிலோ பட்டு நுாலிழை விலை, 4,500 ரூபாயாக உயர்ந்துள்ளது.
விலைவாசி:விலைவாசி உயர்வுடன், பட்டு நூலிழை விலை உயர்வும் நெசவாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இறக்குமதி வரி உயர்வால், பல லட்சம் கைத்தறி நெசவாளர்கள், தொழிலாளர்களின் குடும்பத்தினர், தயாரிப்பாளர்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டு நுாலிழைக்கான இறக்குமதி வரியை, திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)