பதிவு செய்த நாள்
23 டிச2013
00:26
கோபி:கோரா பட்டு நுாலிழை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டு புடவை உற்பத்தியாளர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம்:ஈரோடு மாவட்டம் நம்பியூர், அந்தியூர், சத்தியமங்கலம், டி.ஜி.புதுார், வாணிப்புத்துார், சாவக்காட்டுபாளையம் பகுதியில், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோரா பட்டு நெசவாளர்கள் உள்ளனர்.கோரா பட்டு சேலை உற்பத்தியில், டிசைனர், பாவு நெய்பவர்கள், வண்ணம் தீட்டுபவர்கள், நெசவாளர்கள் என, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.தினமும், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிற்கான, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இறக்குமதி வரி:நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், பட்டு நுாலிழைக்கான இறக்குமதி வரி, 5 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.வரி உயர்வுக்குப்பின், பட்டு நுாலிழை விலை, பல மடங்கு உயரத் துவங்கி உள்ளதால், பட்டு சேலை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.பட்டு நுாலிழை இறக்குமதி வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என, தமிழகம் முழுவதும், கோரா பட்டு நெசவாளர்கள், ஒரு வார காலம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோரா பட்டு உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதி கோவிந்தராஜ் கூறியதாவது:இறக்குமதி வரி உயர்வால், 2,000 ரூபாயாக இருந்த, ஒரு கிலோ பட்டு நுாலிழை விலை, 4,500 ரூபாயாக உயர்ந்துள்ளது.
விலைவாசி:விலைவாசி உயர்வுடன், பட்டு நூலிழை விலை உயர்வும் நெசவாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இறக்குமதி வரி உயர்வால், பல லட்சம் கைத்தறி நெசவாளர்கள், தொழிலாளர்களின் குடும்பத்தினர், தயாரிப்பாளர்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டு நுாலிழைக்கான இறக்குமதி வரியை, திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|