பதிவு செய்த நாள்
23 டிச2013
03:58
விருதுநகர்:விருதுநகர் சந்தையில், கடலை எண்ணெய் விலை உயர்ந்தது. பாமாயில், பருப்பு விலை குறைந்துள்ளது.எண்ணெய் சந்தையில், கடலை எண்ணெய் (15 கிலோ டின்) கடந்த வாரத்தை விட, 100 ரூபாய் உயர்ந்து, தற்போது, 1,350 ஆக உள்ளது. சன்பிளவர் எண்ணெய், 1,200, நல்லெண்ணெய், 2,900 ரூபாய் என்ற அளவில் மாற்றமின்றி இருந்தன.பாமாயில், கடந்த வாரத்தை விட, டின்னுக்கு, 100 ரூபாய் குறைந்து, 995 ஆக உள்ளது. 80 கிலோ நிலக்கடலை பருப்பு, 3,900 ரூபாய்க்கும், 100 கிலோ கடலை புண்ணாக்கு, 3,300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 100 கிலோ சர்க்கரை மூட்டை, 3,015 ரூபாய்க்கும், 90 கிலோ மைதா, 3,090 ரூபாய்க்கும், 90 கிலோ ரவை, 3,375 ரூபாய்க்கும், 55 கிலோ பொரிகடலை, 2,520 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 100 கிலோ பர்மா உளுந்தில், பொடி வகை, 4,350 ரூபாய்க்கும், பருவட்டு வகை, 4,550 ரூபாய்க்கும், நாட்டு உளுந்து, 5,300 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. 100 கிலோ உளுத்தம் பருப்பில், பர்மா பொடி வகை, 5,300 ரூபாய்க்கும், பருவட்டு வகை, 5,700 ரூபாய்க்கும், நாட்டு வகை, 6,800 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
100 கிலோ துவரம் பருப்பில், நாட்டுவகை, 6,700 ரூபாய்க்கும், இரண்டாம் வகை 5,900 ரூபாய்க்கும், பொடி வகை, 5,500 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. இவை, மூட்டைக்கு சராசரியாக, 100 முதல் 150 ரூபாய் வரை குறைந்துள்ளது.100 கிலோ முதல் ரக பாசிப் பருப்பு 8,200 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 8,000 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. 100 கிலோ ஆந்திரா, குண்டூர் வற்றல் 8,000 முதல் 8,100 ரூபாயாக உள்ளது. நாட்டுவற்றல் வரத்து இல்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|