பதிவு செய்த நாள்
14 ஜன2014
05:55
மும்பை:நடப்பு வாரத்தின் துவக்க நாளான நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 0.63 சதவீதம் உயர்ந்தது. கடந்த வார இறுதியில், ரூபாய் மதிப்பு, 61.91ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 39 காசுகள் அதிகரித்து, 61.52ல் நிலை கொண்டது. அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 61.52ஆக காணப்பட்டது. இது, வர்த்தகத்தின் இடையே, 61. 50 61. 60 என்ற அளவில், ஏற்ற,இறக்கமாக இருந்தது. அயல்நாட்டு சந்தையில், அன்னியச் செலாவணிகளுக்கு நிகரான டாலர் மதிப்பு குறைந்துள்ளது. மேலும், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறித்து வெளியான புள்ளி விவரத்தில், அதன் வளர்ச்சி, எதிர்பார்த்ததை விட, குறைவாக காணப்பட்டது. இது போன்ற காரணங்களால், உள்நாட்டில், வங்கிகள், ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகியவை அதிக அளவில் டாலரை விற்பனை செய்தன. இதனால், டாலர் புழக்கம் அதிகரித்து, அதற்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்தது. எனினும், கடந்த ஓராண்டில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 11.05 சதவீதம் சரிவடைந்துள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|