தமிழக அரசின் அலட்சியத்தால் கர்நாடகம் செல்கிறது ரூ.70 கோடிதமிழக அரசின் அலட்சியத்தால் கர்நாடகம் செல்கிறது ரூ.70 கோடி ... பாசிப்பருப்பு, பயி­று விலை ரூ.2,100 வரை உயர்வு பாசிப்பருப்பு, பயி­று விலை ரூ.2,100 வரை உயர்வு ...
மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது -ஆதார் அட்டையும் அவசியமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2014
15:33

புதுடில்லி : பொதுமக்களுக்கு ஓராண்டுக்கு விநி‌யோகிக்கப்பட்டு வரும் மானிய விலை சமையல் சிலிண்டரின் எண்ணிக்கையை 12-ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது பொதுமக்களுக்கு ஆண்டுக்கு 9 மானிய விலை சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை 12ஆக உயர்த்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அதனை ஏற்க அப்போது மத்திய அரசு மறுத்தது. ஆனபோதும் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் சிலிண்டர் எண்ணிக்கையை 12-ஆக உயர்த்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் வலியுறுத்தினார். இதனையடுத்து மத்திய அரசும் மானி‌ய விலை சிலிண்டர் எண்ணிக்கை 12-ஆக உயர்த்த முடிவு செய்தது. அதன்படி இதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவையில் இன்று வழங்கப்பட்டது.

கூடுத‌லாக ரூ.5 ஆயிரம் கோடி செலவு

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை 9-ல் இருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 முதல் இது நடைமுறைக்கு வரும். தற்போது மானியத்திற்காக மத்திய அரசு ஆண்டுக்கு 80 ஆயிரம் கோடி செலவிடுகிறது. சிலிண்டர் எண்ணிக்கையை 12-ஆக அதிகரித்ததன் மூலம் கூடுதலாக மத்திய அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும் என்றார்.

ஆதார் அட்டை தேவையில்லை

சிலிண்டருக்கு வழங்கப்படும் மானிய தொகையை மத்திய அரசு நேரடியாக பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. இதற்கு ஆதார் அட்டை கட்டாயம் தேவை என்ற நிலை இருந்தது. இந்நிலையில் ஆதார் அட்டை தொடர்பாக பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. மேலும் சுப்ரீம் கோர்ட்டும் ஆதார் கார்ட்டை கட்டாயமாக்ககூடாது என அறிவுறுத்தி இருந்தது. இதுதொடர்பாக வழக்குகளும் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று பேசிய மொய்லி, வங்கிகளில் சிலிண்டருக்கான மானியத்தை பெற ஆதார் அட்டை அவசியமில்லை, தற்காலிகமாக மத்திய அரசு அதை நிறுத்தி வைத்துள்ளது என்று கூறியுள்ளார்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)