பதிவு செய்த நாள்
11 மார்2014
00:28
மும்பை:நடப்பு வாரத்தின் முதல் நாளான திங்களன்று, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்ததால், இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சிறப்பாக காணப்பட்டது.அதே சமயம், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மந்தமாக இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' 15.04 புள்ளிகள் அதிகரித்து, 21,934.83 புள்ளிகளில் நிலை கொண்டது.இது, வர்த்தகத்தின் இடையே, முதன் முறையாக, 22 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களில், மாருதி, எச்.டீ.எப்.சி., பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட, 15 நிறுவன பங்குகளின் விலை உயர்வையும், டி.சி.எஸ்., கெயில் உள்ளிட்ட இதர, 15 நிறுவன பங்குகள் விலையும் சரிவை கண்டன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 10.60 புள்ளிகள் அதிகரித்து, 6,537.25 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, வர்த்தகத்தின் இடையே, முதன் முறையாக, 6,562.20 புள்ளிகளை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|