புதிய நிறுவனங்கள் ஒரு லட்சம் உதயம்புதிய நிறுவனங்கள் ஒரு லட்சம் உதயம் ... பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து 33 லட்சம் முதலீட்டாளர்கள் ஓட்டம் பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து 33 லட்சம் முதலீட்டாளர்கள் ஓட்டம் ...
நிறுவனங்களின் செயல்பாட்டில் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2014
01:45

பொருளாதார மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, வட்டி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையில், கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டில், பல நிறுவனங்களின், வருவாய் மற்றும் லாப வளர்ச்சி அதிகரித்து உள்ளன.

வருவாய் வளர்ச்சி:கடந்த 2013 - 14ம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை, இதுவரை, 129 நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.இவற்றின் ஒட்டு மொத்த வருவாய் வளர்ச்சி, கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில், 13.3 சதவீதம் என்ற அளவிலும், நிகர லாபம், 14.7 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்துள்ளன.இவை, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் முறையே, 12.9 சதவீதம் மற்றும் 13.7 சதவீதம் என்ற அளவில் இருந்தன.மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிறுவனங்களில், வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவற்றையும் சேர்த்தால், நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சியில் மாற்றம் இருக்கும்.
கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில், தகவல் தொழில்நுட்பம், சிமென்ட், தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி சேவை நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் லாப வளர்ச்சி நன்கு உள்ளது.

செலவினங்கள்:குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப துறையில், நான்கு பெரிய நிறுவனங்களின் விற்பனை வருவாய், 39 சதவீத அளவிற்கும், லாபம், 27 சதவீத அளவிற்கும் வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு துறை நிறுவனங்கள், அவற்றின் செயல்பாட்டு செலவினங்களை வெகுவாக குறைத்துக் கொண்டன. இதையடுத்து,மேற்கண்ட துறை நிறுவனங்களின் வருவாயும், லாப வரம்பும் அதிகரித்துள்ளன.

பொருளாதார மந்த நிலையிலும், தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி சேவை நிறுவனங்களின் சிறந்த நிர்வாகத் திறனால், இவற்றின் வருவாய் வளர்ச்சி அதிகரித்துள்ளது.கணக்கீட்டு காலாண்டில், முன்னணி தனியார் துறை வங்கிகளின், நிகர வட்டி வருவாய், 16 சதவீத அளவிற்கும், வருவாய் வளர்ச்சி, 19 சதவீத அளவிற்கும் உயர்ந்துள்ளது என, மோதிலால் ஆஸ்வால் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரஜத் ரஜ்ஹரிகா தெரிவித்தார்.

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில், 'சென்செக்ஸ்' மற்றும் 'நிப்டி' குறியீட்டு எண்கள் கணக்கிட உதவும், நிறுவனங்களுள், பல நிறுவனங்களின் வருவாய், 12 சதவீத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.குறிப்பாக, 'நிப்டி' கணக்கிட உதவும், 50 நிறுவனங்களுள், 15 நிறுவனங்கள், நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளன.

சிமென்ட் துறைஇவற்றின், ஒட்டு மொத்த நிகர லாபம், முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 17 சதவீத அளவிற்கும், வருவாய், 14.5 சதவீத அளவிற்கும் அதிகரித்துள்ளன.இதே போன்று, சிமென்ட் துறையில், ஏ.சி.சி., நிறுவனம் தவிர்த்த, ஏனைய நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி மேம்பட்டுள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, கணக்கீட்டு காலாண்டில், மூலப் பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையிலும், அல்ட்ரா டெக் சிமென்ட் நிறுவனத்தின் லாபம், 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)