மாம்பழம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு!மாம்பழம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு! ... நோக்­கியா சி.இ.ஓ.,ஆகஇந்­தியர் நிய­மனம் நோக்­கியா சி.இ.ஓ.,ஆகஇந்­தியர் நிய­மனம் ...
அதிக விலைக்கு மருந்துகள்: நிறுவனங்களுக்கு அபராதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2014
23:58

கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் முதல், நடப்பு 2014ம் ஆண்டு மார்ச் வரை­யி­லான காலத்தில், நிர்­ண­யிக்­கப்­பட்­டதை விட, கூடுதல் விலையில் மருந்­து­களை விற்­பனை செய்த நிறு­வ­னங்கள் மீது, 1,018 வழக்­குகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.
வழக்குகள்:அந்­நி­று­வ­னங்­க­ளிடம் இருந்து, கூடுதல் விலை மற்றும் வட்டி உட்­பட, 3,382 கோடி ரூபாய் அப­ராதம் விதக்­கப்­பட்­டுள்­ளது. இதில், 274 கோடி ரூபாய் வசூ­லிக்­கப்­பட்­டுள்­ளது. பல மருந்து நிறு­வ­னங்கள் மீதான வழக்­குகள், நீதி­மன்­றங்­களில் உள்­ளதால், எஞ்­சிய தொகை வசூ­லிக்­கப்­ப­டாமல் உள்­ளது.மத்­திய அரசு, அனைத்து தரப்­பி­ன­ருக்கும் குறைந்த விலையில், அத்­தி­யா­வ­சிய மருந்­துகள் கிடைக்கும் நோக்கில், கடந்த, 1997ம் ஆண்டு, தேசிய மருந்து விலை ஆணையம் (என்.பி.பி.ஏ.,) என்ற அமைப்பை ஏற்­ப­டுத்­தி­யது.
இந்த அமைப்பு, பல்­வேறு மருந்து நிறுவனங்­களின் தயா­ரிப்­பு­க­ளுக்கு, குறிப்­பாக, அத்­தி­யா­வ­சிய மருந்­து­க­ளுக்கு விலை நிர்­ணயம் செய்து வரு­கி­றது.நிர்­ண­யிக்­கப்­பட்­டதை விட, அதிக விலைக்கு மருந்­து­களை விற்­பனை செய்யும் நிறு­வ­னங்கள் மீது, என்.பி.பி.ஏ., அப­ராதம் விதிப்­பது உள்­ளிட்ட ஒழுங்கு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது.
மருந்­து­களின் மொத்த விற்­பனை விலை குறி­யீட்டின் அடிப்­ப­டையில், ஆண்­டுக்கு ஒரு முறை மருந்­து­களின் விலையை உயர்த்திக் கொள்ள மருந்து நிறு­வ­னங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்டுள்­ளது.விதிமுறைகள்:எனினும், இந்த விலை உயர்­வுக்கும், என்.பி.பி.ஏ.,–ன் அனு­மதி தேவை. ஆனால், பல மருந்து நிறு­வ­னங்கள், இந்த விதி­மு­றை­களை கடை­பி­டிக்­காமல், தன்­னிச்­சை­யாக மருந்­து­களின் விலையை உயர்த்திக் கொள்­கின்­றன.இதன்­படி, கடந்த 2013–14ம் நிதி­யாண்டில், 89 மருந்து நிறு­வ­னங்கள் மீது, நிர்­ண­யிக்­கப்­பட்­டதை விட, அதிக விலைக்கு மருந்­து­களை விற்­பனை செய்­த­தாக, என்.பி.பி.ஏ., குற்­றம்­சாட்டி, 384 கோடி ரூபாய் அப­ராதம் விதித்­துள்­ளது.

இந்த நட­வ­டிக்­கையை எதிர்த்து பல நிறு­வ­னங்கள், நீதி­மன்­றங்­களில் வழக்கு தொடுத்­துள்­ளன. இதனால், சென்ற நிதி­யாண்டில், அப­ராத தொகையில், 40 கோடி ரூபாய் மட்­டுமே வசூ­லா­கி­யுள்­ளது.அண்­மையில், பிர­பல மருந்து நிறு­வ­ன­மான சிப்லா, அதன் 'சிப்ரோ' ஊசி மருந்து மற்றும் 'சிப்லாக்ஸ்' மருந்­து­களை, நிர்­ண­யிக்­கப்­பட்­டதை விட, கூடுதல் விலையில் விற்­பனை செய்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.இதை­ய­டுத்து, ‘சிப்ரோ' ஊசி மருந்­திற்கு, 24 கோடி ரூபாயும், 'சிப்லாக்ஸ்' மருந்­து­க­ளுக்கு, 81 கோடி ரூபாயும், ஆக, 105 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என, சிப்லா நிறு­வ­னத்­திற்கு, என்.பி.பி.ஏ., நோட்டீஸ் அனுப்­பிஉள்­ளது.
தொற்று நோய்:கடந்த ஜன­வ­ரியில், இதே நிறு­வ­னத்­திற்கு,வேறு சில மருந்­து­களை கூடுதல் விலையில் விற்­பனை செய்­த­தற்­காக, 1,700 கோடி ரூபாய் அப­ராதம் விதிக்­கப்­பட்­டது.பாக்­டீ­ரி­யாக்­களால் உண்­டாகும் தொற்று நோய்­க­ளுக்கு 'சிப்லாக்ஸ்' மருந்தும், சிறு­நீ­ரக தொற்­று­நோய்­களுக்கு 'சிப்­ரோ­பி­ளாக்சின்' மருந்தும் பயன்­படுத்தப்­ப­டு­கி­றது.
–பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)