பதிவு செய்த நாள்
02 மே2014
01:35
புதுடில்லி:நடப்பு 2014–15ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6 சதவீதமாக உயரும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தெரிவித்தார்.
சர்வதேச நிலவரங்கள்:மத்திய அரசின் கொள்கை திட்டங்கள் மற்றும் முதலீடு அதிகரித்து வருவது போன்றவற்றால், நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, 6 சதவீதமாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாத நிலையிலும், மத்திய அரசின், 10 அம்ச பொருளாதார கொள்கையால், நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.கடந்த 2009–10ம் நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, 9 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து இருந்தது.
இந்நிலையில், சர்வதேச பொருளதார மந்த நிலையால், கடந்த, 2011–12ம் நிதியாண்டில், இது, 6.7 சதவீதமாகவும், 2012–13ல், 4.5 சதவீதமாகவும் சரிவடைந்துஇருந்தது.ஆனால், கடந்த, 2013–14ம் நிதியாண்டில், இந்த வளர்ச்சி, 4.9சதவீதமாக சற்று அதிகரித்திருந்தது.இடர்பாடுகள்:எதிர்க்கட்சிகள் குற்றம் கூறினா லும், பல்வேறு இடர்பாடுகளுக்கிடையில், காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், 10 ஆண்டு கால ஆட்சி யில், பொருளாதாரம் பேணிகாக்கப்பட்டுள்ளது என, சிதம்பரம் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|