பதிவு செய்த நாள்
05 மே2014
04:35
புதுடில்லி:கடந்த மார்ச் மாதம், சர்வதேச நாடுகளின் கச்சா உருக்கு உற்பத்தியில், இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது.உலகளவில், கடந்த மார்ச் மாதம், 14.13 கோடி டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதில், சீனா, 7 கோடி டன் உருக்கு உற்பத்தி மேற்கொண்டு, முதலிடத்தை பிடித்துள்ளது. ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முறையே, 97 லட்சம் டன் மற்றும் 74 லட்சம் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்து, இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.இந்தியா, 72 லட்சம் டன் உருக்கு உற்பத்தி மேற்கொண்டு, நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
அடுத்த இடங்களில், தென்கொரியா (61 லட்சம் டன்), ரஷ்யா (60 லட்சம்), ஜெர்மனி (40 லட்சம்), பிரேசில் (28 லட்சம்), துருக்கி (28 லட்), உக்ரைன் (26 லட்சம் டன்) ஆகிய நாடுகள் உள்ளன.கடந்த 2013ம் ஆண்டு, மார்ச் மாதம், உலக நாடுகள், 13.52 கோடி டன் கச்சா உருக்கை உற்பத்தி செய்திருந்தன என்பது, குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|