பதிவு செய்த நாள்
13 மே2014
01:46
புதுடில்லி:நடப்பு 2013–14ம் பருவத்தில் (அக்.,– செப்.,), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.48 கோடி டன்னாக உயரும் என, அமெரிக்க வேளாண் துறை (யு.எஸ்.டீ.ஏ.,) மதிப்பீடு செய்துள்ளது.இதே காலத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 2.38 கோடி டன்னாக இருக்கும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா), ஏற்கனவே மதிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஆக, 'இஸ்மா'–வை விட, யு.எஸ்.டீ.ஏ., வின் மதிப்பீட்டில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, கூடுதலாக 10 லட்சம் டன் அதிகரிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு பருவத்தில், சென்ற ஏப்.,15ம் வரையிலான காலத்தில், 2.31கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என, 'இஸ்மா' தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், சர்க்கரை உற்பத்தி, யு.எஸ்.டீ.ஏ.,வின் மதிப்பீட்டிற்கு ஏற்ப இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|