மோசமான வானிலையால்கருப்பு தேயிலை உற்பத்தி சரிவுமோசமான வானிலையால்கருப்பு தேயிலை உற்பத்தி சரிவு ... உலகளவில் வெள்ளிக்கு மவுசு கூடுகிறது உலகளவில் வெள்ளிக்கு மவுசு கூடுகிறது ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
உணவு தானிய உற்பத்தி புதிய உச்சத்தை எட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2014
00:34

புதுடில்லி:நடப்பு, 2013–14ம் பயிர் பருவத்தில் (ஜூலை–ஜூன்), நாட்டின் உணவு தானிய உற்பத்தி, முந்தைய மதிப்பீட்டை விட, 10 லட்சம் டன் அதிகரித்து, சாதனை அளவாக, 26.44 கோடி டன்னை எட்டும் என, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, வெளியிடப்பட்ட நான்காவது முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கை விவரம் வருமாறு:கடந்த 2012–13ம் பயிர் பருவத்தில், உணவு தானிய உற்பத்தி, சாதனை அளவாக, 25.71 கோடி டன்னாக இருந்தது.
இது, நடப்பு பயிர் பருவத்தில், 26.44 கோடி டன்னாக உயரும்.கடந்த ஆண்டு பருவ மழை நன்கு இருந்ததால், பல உணவு தானியங்கள், உற்பத்தியில் புதிய சாதனை படைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நெல் உற்பத்தி, 10.63 கோடி டன்னாகவும், கோதுமை உற்பத்தி, 9.58 கோடி டன் என்ற அளவிலும் புதிய சாதனை படைக்கப்படும்.கடந்த பருவத்தில், நெல், கோதுமை ஆகியவற்றின் உற்பத்தி, முறையே, 10.53 கோடி டன் மற்றும் 9.35 கோடி டன் என்ற அளவில் இருந்தன.
மேலும், துவரம்பருப்பு (33.80 லட்சம் டன்), பயறு (99.30 லட்சம் டன்) சோளம் (2.42 கோடி டன்), பருப்பு வகைகள் (1.95 கோடி டன்), பருத்தி (3.65 கோடி பொதிகள்) மற்றும் சணல் (1.08 கோடி பொதிகள்) ஆகியவையும், உற்பத்தியில் சாதனை படைத்தன.இதற்கு முன், 2011–12ம் பயிர் பருவத்தில், உணவு தானியங்கள், நெல், கோதுமை ஆகியவற்றின் உற்பத்தி, சாதனை அளவாக, முறையே, 25.93 கோடி டன், 10.53 கோடி டன் மற்றும், 9.49 கோடி டன் என்ற அளவில் இருந்தன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)