பதிவு செய்த நாள்
26 மே2014
00:29
புதுடில்லி:ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், அதன் 'சான்டா எப்இ' கார்களில் விளக்கு விசையை மாற்றித் தருவதாக அறிவித்துள்ளது.
இதன்படி, கடந்த, 2011ம் ஆண்டு, ஜூன் 26 முதல், 2013ம் ஆண்டு செப்., 26 வரையிலான காலத்தில் தயாரிக்கப்பட்ட, 2,437 'சான்டா எப்இ' கார்களை இந்நிறுவனம், திரும்ப பெற உள்ளது.இந்த கார்களில், 'பிரேக்' ஐ அழுத்தினால், அதன் அருகில் பொருத்தப்பட்டுள்ள விசை இயங்கி, சிகப்பு விளக்கு எரியும். இந்த செயல்பாட்டில் கோளாறு உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதை அடுத்து, குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட கார்களை திரும்ப பெற்று, புதிய விளக்கு விசையை பொருத்தி தர, ஹூண்டாய் மோட்டார் இந்தியா முடிவு செய்துள்ளது.இது குறித்து, சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என, இந்நிறு வனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|