பி.எப்., தீர்வில் ஏற்­படும் தாமதம்:ஆணையர் ஊதி­யத்­திற்கு பாதகம்பி.எப்., தீர்வில் ஏற்­படும் தாமதம்:ஆணையர் ஊதி­யத்­திற்கு பாதகம் ... ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது - ரூ.59.04 ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது - ரூ.59.04 ...
புதிய அர­சுக்கு ரூ.1 லட்சம் கோடி மானிய சுமை:மன்­மோகன் சிங் அரசு விட்டுச் சென்ற நிலுவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2014
01:29

புது­டில்லி:முந்­தைய ஐ.மு., அரசு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதி­க­மான மானியச் சுமையை, பிர­தமர் மோடி தலை­மை­யி­லான, பா.ஜ., அர­சுக்கு விட்டுச் சென்­றுள்­ளது.இது, புதிய நிதி­ய­மைச்­ச­ர் அருண் ஜெட்லிக்கு, மிகப் பெரிய சவா­லாக இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.உணவு:மொத்த மானிய நிலு­வையில், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதி­க­மான தொகை, பொது வினி­யோக திட்டம் சார்ந்த உணவு மானி­யத்தின் கீழ், வழங்­கப்­பட வேண்டும்.இத்­துடன், உர நிறு­வ­னங்­க­ளுக்­கான மானிய நிலுவை, 38 ஆயிரம் கோடி ரூபாய் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இந்நி­று­வ­னங்கள், உற்­பத்தி செலவை விட குறை­வாக, அரசு நிர்­ண­யித்­துள்ள விலைக்கு, உரம் விற்­பனை செய்­கின்­றன.இதனால், அவற்றின் உற்­பத்தி செல­விற்கும், விற்­பனை விலைக்கும் உள்ள வித்­தி­யாசம், மானி­ய­மாக வழங்­கப்­ப­டு­கி­றது.அது போன்று, பொதுத் துறையை சேர்ந்த, ஐ.ஓ.சி., எச்.பி.சி.எல்., பீ.பி.சி.எல்., ஆகிய மூன்று எண்ணெய் சந்­தைப்­ப­டுத்தும் நிறு­வ­னங்கள், அடக்க விலைக்கும் குறை­வாக, டீசல், மண்­ணெண்ணெய், சமையல் எரி­வாயு ஆகி­ய­வற்றை வினி­யோ­கித்து வரு­கின்­றன.
இந்­நி­று­வ­னங்­களின் இழப்பை ஈடு­செய்யும் வகையில், மானியம் வழங்­கப்­ப­டு­கி­றது. இந்த வகையில், முந்­தைய மன்­மோகன் சிங் அரசு, எண்ணெய் நிறு­வ­னங்­க­ளுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்­துள்­ளது.மேற்­கண்ட நிலுவை மட்­டு­மின்றி, நிதிப் பற்­றாக்­கு­றையை கட்­டுப்­ப­டுத்­தவும், வரி வசூல் இலக்கை எட்­டவும், அதிக அளவில் நிறு­வ­னங்­க­ளிடம் இருந்து முன்­கூட்­டிய வரி பெறப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு கூடு­த­லாக பெறப்­பட்ட தொகையை, வட்­டி­யுடன், சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு திரும்ப அளிக்க வேண்­டிய சுமையும், நிதி­ய­மைச்­ச­கத்தின் மீது விழுந்­துஉள்­ளது.
வட்டி செலவு:கடந்த நிதி­யாண்டின், நான்காம் காலாண்­டிற்­கான மானியம், நடப்பு நிதி­யாண்டில் தான் வழங்­கப்­படும் என, முந்­தைய நிதி­ய­மைச்சர் ப.சிதம்­பரம் கூறி­னாலும், இது புதிய அர­சுக்கு, மிகப் பெரிய சுமை­யா­கவே இருக்கும் என, பொரு­ளா­தார வல்­லு­னர்கள் கூறு­கின்­றனர்.ஏனெனில், குறித்த காலத்தில் கிடைக்­காத மானிய உத­வியால், பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்கள், வங்­கியில் வட்­டிக்கு கடன் பெற்று, அவற்றின் தேவையை பூர்த்தி செய்து கொள்­கின்­றன. இதனால், இந்­நி­று­வ­னங்­களின் கடன், வட்டிச் செல­வினம் ஆகி­யவை உயரும்.
மானிய நிலுவை, முன்­கூட்­டிய வரி வசூல் போன்­ற­வற்றால், சென்ற நிதி­யாண்டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி யில், நாட்டின் நிதிப் பற்­றாக்­குறை, 4.6 சத­வீ­த­மாக உள்­ளது. இதை, நடப்பு நிதி­யாண்டில், 4.1 சத­வீ­த­மாக குறைக்க, இடைக்­கால பட்­ஜெட்டில் இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுஉள்­ளது.இலக்கு:நிலு­வையில் உள்ள 1 லட்சம் கோடி ரூபாய் மானியம், கடந்த நிதி­யாண்டில், அதா­வது, முந்­தைய அரசு அளித்­தி­ருந்தால், நடப்பு நிதி­யாண்டின், நிதிப் பற்­றாக்­குறை இலக்கில், குறிப்­பி­டத்­தக்க மாற்றம் இருந்­தி­ருக்கும் என, ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)