தங்கம் ஏற்றுமதியில் விறுவிறுப்புதங்கம் ஏற்றுமதியில் விறுவிறுப்பு ... சர்க்கரை மீதான இறக்குமதி வரியை40 சதவீதமாக உயர்த்த கோரிக்கை சர்க்கரை மீதான இறக்குமதி வரியை40 சதவீதமாக உயர்த்த கோரிக்கை ...
நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும்: கோல்டுமேன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2014
01:07

புதுடில்லி; நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2.6 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது என, கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய அரசுஅந்த ஆய்வறிக்கையில் மேலும் உள்ள விவரம் வருமாறு:கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 0.9 சதவீதம் (420 கோடி டாலர்) என்ற அளவிற்கு இருந்தது. இது, நடப்பாண்டின் இதே காலத்தில், 0.2 சதவீதம் (120 கோடி டாலர்) என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.இது, கடந்த 2009ம் ஆண்டின், முதல் காலாண்டிற்கு பின் காணப்படும், மிகக் குறைந்த அளவாகும்.
இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி அதிகரித்ததை அடுத்து, வர்த்தகப் பற்றாக்குறை குறைந்துள்ளது. இது, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, குறைய வழி வகுத்துள்ளது.மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு, தங்கம் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம், உள்நாட்டில், பல்வேறு பொருட்களுக்கான தேவை உயரும் என, தெரிகிறது.இவற்றின் அடிப்படையில், வரும் மாதங்களில், நாட்டின் இறக்குமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது.ரிசர்வ் வங்கிஇதனால், நடப்பு, 2014 – 15ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2.6 சதவீதமாக உயரக் கூடும்.இது, சென்ற நிதியாண்டில், 1.7 சதவீதமாகவும், அதற்கு முந்தைய நிதியாண்டில், 4.7 சதவீதமாகவும் இருந்தது.
ரிசர்வ் வங்கி, டாலர் கையிருப்பை அதிகரித்துக் கொள்ள விரும்பும். அதே சமயம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் உயர்வை விரும்பாது. இந்தியாவுக்கும், அதன் வர்த்தக உறவு நாடுகளுக்கும், பணவீக்கம் அடிப்படையிலான இடைவெளி அதிகரிக்கும்.மேற்கண்ட அம்சங்களுடன், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் உயர வாய்ப்புள்ளது என்பதால், ரூபாய் மதிப்பு, மிகப் பெரிய அளவிற்கு அதிகரிக்காது. அடுத்த மூன்று, ஆறு மற்றும் 12 மாதங்களில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு முறையே, 58.50, 61 மற்றும் 63 ஆக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)