பதிவு செய்த நாள்
28 மே2014
01:07
புதுடில்லி; நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2.6 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது என, கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய அரசுஅந்த ஆய்வறிக்கையில் மேலும் உள்ள விவரம் வருமாறு:கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 0.9 சதவீதம் (420 கோடி டாலர்) என்ற அளவிற்கு இருந்தது. இது, நடப்பாண்டின் இதே காலத்தில், 0.2 சதவீதம் (120 கோடி டாலர்) என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.இது, கடந்த 2009ம் ஆண்டின், முதல் காலாண்டிற்கு பின் காணப்படும், மிகக் குறைந்த அளவாகும்.
இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி அதிகரித்ததை அடுத்து, வர்த்தகப் பற்றாக்குறை குறைந்துள்ளது. இது, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, குறைய வழி வகுத்துள்ளது.மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு, தங்கம் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம், உள்நாட்டில், பல்வேறு பொருட்களுக்கான தேவை உயரும் என, தெரிகிறது.இவற்றின் அடிப்படையில், வரும் மாதங்களில், நாட்டின் இறக்குமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது.ரிசர்வ் வங்கிஇதனால், நடப்பு, 2014 – 15ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2.6 சதவீதமாக உயரக் கூடும்.இது, சென்ற நிதியாண்டில், 1.7 சதவீதமாகவும், அதற்கு முந்தைய நிதியாண்டில், 4.7 சதவீதமாகவும் இருந்தது.
ரிசர்வ் வங்கி, டாலர் கையிருப்பை அதிகரித்துக் கொள்ள விரும்பும். அதே சமயம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் உயர்வை விரும்பாது. இந்தியாவுக்கும், அதன் வர்த்தக உறவு நாடுகளுக்கும், பணவீக்கம் அடிப்படையிலான இடைவெளி அதிகரிக்கும்.மேற்கண்ட அம்சங்களுடன், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் உயர வாய்ப்புள்ளது என்பதால், ரூபாய் மதிப்பு, மிகப் பெரிய அளவிற்கு அதிகரிக்காது. அடுத்த மூன்று, ஆறு மற்றும் 12 மாதங்களில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு முறையே, 58.50, 61 மற்றும் 63 ஆக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|