பதிவு செய்த நாள்
30 மே2014
00:36
மும்பை: கடந்த ஏப்ரலில், ஜி.எஸ்.எம்., மொபைல் போன் சேவையில், 25.80 லட்சம் கிராமப்புற வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்து உள்ளனர். இது, முந்தைய மார்ச் மாதத்தை விட, 0.88 சதவீதம் அதிகம்.இதையடுத்து, ஜி.எஸ்.எம்., மொபைல் போன் சேவையை பெற்ற, கிராமப்புற வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை, 27.79 கோடியில் இருந்து, 29.72 கோடியாக உயர்ந்துஉள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனம், 9.90 லட்சம் புதிய கிராமப்புற வாடிக்கையாளர்களை ஈர்த்து முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து, இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த கிராமப்புற வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 9.47 கோடியாக அதிகரித்து உள்ளது.ஐடியா செல்லுலார் நிறுவனம், 9.80 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்த்து, இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் கிராமப்புற வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை, 7.57 கோடியாக உயர்ந்துள்ளது.யுனிநார் நிறுவனத்தின் கிராமப்புற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 3.50 லட்சம் உயர்ந்து, 1.15 கோடியாக அதிகரித்துள்ளது.
ஏர்செல் நிறுவனத்தின் கிராமப்புற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 40 ஆயிரம் குறைந்து, 2.55 கோடியாக சரிவடைந்துள்ளதுகடந்த ஆறு மாதங்களாக, கிராமப்புறங்களில், ஜி.எஸ்.எம்., மொபைல் போன் சேவை வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதாக, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.,) தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|