மொபைல் எண் மாறாமல் சேவை நிறு­வ­னங்­களை மாற்­றியோர் எண்­ணிக்கை 10 கோடியை எட்­டி­யதுமொபைல் எண் மாறாமல் சேவை நிறு­வ­னங்­களை மாற்­றியோர் எண்­ணிக்கை 10 கோடியை ... ... நுண்கடன் துறை 35 சதவீதம் வளர்ச்சி நுண்கடன் துறை 35 சதவீதம் வளர்ச்சி ...
ஏர் – ­ஏ­ஷியா விமான சேவையை துவக்குவதில் திடீர் சிக்கல்:சட்ட விரோதமாக அனுமதி பெற்றதாக குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2014
00:25

புது­டில்லி:ஏர் – ஏஷியா இந்­தியா நிறு­வ­னத்­திற்கு, சட்­ட­வி­ரோ­த­மாக அனு­மதி வழங்­கப்­பட்டுள்­ளதால், அதன் விமான சேவையை அனு­ம­திக்க கூடாது என, இந்­திய விமான சேவை நிறு­வ­னங்­களின் கூட்­ட­மைப்பு (எப்.ஐ.ஏ.,) மத்­திய அரசுக்கு கோரிக்கை விடுத்­துள்­ளது.
நிதி­ய­மைச்சர்:இது குறித்து, இந்த அமைப்பின் சார்பில், நிதி­ய­மைச்சர் அருண்­ஜெட்­லிக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் உள்ள விவரம் வரு­மாறு:ஏர் – ஏஷியாவின் விமான சேவை, வரும் 12ம் தேதி துவங்கும் என, அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இச்­சே­வைக்கு, சட்ட­வி­ரோ­த­மாக அனு­மதி வழங்­கப்­பட்டுள்­ளது.
விமான சேவைக்­கான உரிமம் கிடைத்த கார­ணத்­திற்­காக, ஒரே ஒரு விமா­னத்­துடன், ஏர் – ஏஷியா விமான சேவையை துவக்க உள்­ளது. அதனால், இச்­சேவை குறித்து அரசு ஆய்வு செய்­வது கடினம். ஆகவே, விமான போக்­கு­வ­ரத்து தலைமை இயக்­கு­ன­ரகம், ஏர் – ஏஷியா இந்தியாவின் விமான சேவைக்கு அனு­மதி வழங்கக் கூடாது என, அரசு உத்­த­ர­விட வேண்டும்.
முந்­தைய நிதி­ய­மைச்­சகம் மற்றும் அன்­னிய முத­லீட்டு மேம்­பாட்டு வாரியம் ஆகி­யவை, அவ­சர கதியில், ஏர் – ஏஷியா இந்­தியா நிறு­வ­னத்தின் விமான சேவைக்கு சட்ட விரோ­த­மாக அனு­மதி வழங்­கி­யுள்­ளன. விமான துறையில் அன்­னிய முத­லீடு தேவை தான். அது, உள்­நாட்டு நிறு­வ­னங்­களை பாதிக்­காத வகையில் இருக்க வேண்டும். ஏற்­க­னவே இயங்கி வரும் உள்­நாட்டு விமான நிறு­வ­னங்­களில் தான், அன்­னிய நேரடி முதலீட்­டிற்கு அனு­மதி வழங்க முடியும்.
விதி­முறை:அயல்­நாட்டை சேர்ந்த நிறு­வனம், இந்­தி­யாவில் புதிய விமான சேவையை துவக்க அனு­மதி வழங்­கு­வ­தற்கு விதி­முறை­களில் இடம் இல்லை. ஆகவே, ஏர் – ஏஷியாவின் விமான சேவையை அனு­ம­திக்க கூடாது. இவ்­வாறு அந்த கடி­தத்தில் கூறப்­பட்டுள்­ளது.
இக்­க­டி­தத்தின் நகல், விமான போக்­கு­வ­ரத்து துறை அமைச்சர் கஜ­பதி ராஜூ­வுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.மலே­ஷி­யாவின் ஏர் – ஏஷியா நிறு­வனம், டாட்டா குழுமம், டெலஸ்ட்ரா டிரேட் ­பிளேஸ் ஆகிய நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து, ஏர் – ஏஷியாஇந்­தி­யாவின் கீழ், விமான சேவையை மேற்­கொள்ள உள்­ளது. ஏர் – ஏஷியா விமான பய­ணத்­திற்­கான டிக்கெட் முன்­ப­திவுவெள்­ளி­யன்று துவங்­கி­யது. பெங்­களூரூ – கோவா இடையே முதல் விமான சேவை நடை­பெற உள்­ளது. இதற்கு, 990 ரூபாய் என, மிக குறைந்த கட்­டணம் வசூலிக்கப்­படு­கி­றது.
கேள்­விக்­கு­றி­:வெளி­நா­டு­களில் குறைந்த கட்­ட­ணத்தில் விமான சேவையை வழங்கி வரும் ஏர் – ஏஷியா, பல்­வேறு தடை­களை கடந்து, இந்­தி­யாவில் கால் பதித்துஉள்­ளது.
இது, உள்­நாட்டு விமான சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு கடும் போட்­டி­யாக விளங்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதை­ய­டுத்து, அதன் விமான சேவைக்கு கடும் எதிர்ப்பு எழுந்­துள்­ளது.இதனால், ஏர் – ஏஷியா திட்­ட­மிட்­ட­படி, வரும் 12ம் தேதி, விமான சேவையை துவக்­குமா என்­பது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)