'ரூபாய் மதிப்பு அதிகரித்தால் நிலைமை சீராகும்': டீசல் விலை உயர்வு குறித்து கருத்து'ரூபாய் மதிப்பு அதிகரித்தால் நிலைமை சீராகும்': டீசல் விலை உயர்வு ... ... சமையல் எரிவாயு சிலிண்டர் 9 ஆக குறைக்கப்படுமா?:வீடுகளுக்கு தருவது டீ கடைகளுக்கு செல்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் 9 ஆக குறைக்கப்படுமா?:வீடுகளுக்கு தருவது டீ ... ...
தடை நீங்கியும் தமிழகத்தில் மீன் விலை குறையவில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2014
15:19

சென்னை : தடை காலம் முடிந்து, தமிழகத்தில், மீன்பிடி தொழில் சூடுபிடித்தாலும், மீன் விலை இன்னும் குறையவில்லை. விசைப்படகுகள் கரை திரும்ப நான்கு நாட்களாகும் என்பதால், அசைவ பிரியர்கள், அதுவரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட, கிழக்கு கடலோரப் பகுதிகளில் (வங்கக்கடல்), மீன்களின் இன விருத்திக்காக, 45 நாட்கள், மீன்பிடி தடை விதிக்கப்பட்டிருந்தது. மக்கள் முகாம் இந்தத் தடை, மே, 29ம் தேதியுடன் முடிந்தது. தொடர்ந்து, 45 நாட்களாக ஓய்வெடுத்த விசைப்படகுகள், 30ம் தேதி அதிகாலையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்றன. தமிழகம் முழுவதும் உள்ள, 15 ஆயிரம் விசைப்படகுகளில், 60 சதவீதம் படகுகள் கடலுக்குள் சென்றுள்ளன. இதனால், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள துறைமுகங்களும் களைகட்டியுள்ளன.
கடலுக்குள் சென்ற சில படகுகள், ஓரிரு நாட்கள் மீன்களை பிடித்துவிட்டு, நேற்று காலை, கரைக்கு வந்தன. குறைந்த விலையில் மீன்கள் கிடைக்கும் என, அசைவ பிரியர்கள், மீன்பிடி துறைமுகங்களில் முகாமிட்டனர். சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஓரளவிற்கு மீன்கள் வந்தன; ஆனால், விலையில் மாற்றம் இல்லை.
விலை நிலவரம் வஞ்சிரம் முதல் ரகம் - 900 ரூபாய்; இரண்டாம் ரகம் - 500; இறால் முதல் ரகம் - 1,110; இரண்டாம் ரகம் - 450; நண்டு, 200 முதல் 250 ரூபாய்; சீலா - 300; பாறை - 220 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகின. துக்கடா மீன்கள் கூட, கிலோ, 100 ரூபாய்க்கு மேல் தான் விற்றன. விலை குறையாததால், அசைவ பிரியர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். விசைப்படகு மீனவர்கள் கூறியதாவது: மீன்பிடி தடை, மே, 29 நள்ளிரவு தான் முடிந்தது. 30ம் தேதி அதிகாலை தான் விசைப்படகுகள் கடலுக்குள் சென்றன. ஓரிரு நாளில் திரும்பும் படகுகள் தான் கரைக்கு வந்துள்ளன.
மீன் வரத்தும் குறைவாகவே உள்ளது. வழக்கமாக, விசைப்படகுகள், ஒரு வாரம் முதல், 10 நாட்கள் கழித்து தான் கரை திரும்பும். 30ம் தேதி சென்ற விசைப்படகுகள், 5, 6ம் தேதிகளில் தான் கரை திரும்பும். எல்லாரும் எதிர்பார்க்கும் அளவில், மீன் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால், மீன் விலையும் வெகுவாகக் குறையும். அதுவரை, அசைவ பிரியர்கள் காத்திருக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)