பதிவு செய்த நாள்
02 ஜூன்2014
17:46
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகளில் அதிரடி முன்னேற்றம் காணப்பட்டன. வங்கி, எரிவாயு, உலோகம் மற்றும் ஆட்டோமொபைல் உள்ளிட்ட முக்கிய துறை நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்கியதால் அத்துறை சார்ந்த பங்குகளின் விலையில் அதிரடி முன்னேற்றம் காணப்பட்டன. இதனால் இந்திய பங்குசந்தைகள் பெரிய ஏற்றத்துடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 467.51 புள்ளிகள் உயர்ந்து 24,684.85 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 132.55 புள்ளிகள் உயர்ந்து 7,362.50 புள்ளிகளிலும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் பெரும்பாலான பங்குகளின் விலை உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக எல்அண்ட்டி நிறுவன பங்குகள் விலை 6.40 சதவீதம் உயர்ந்தது. எஸ்பிஐ., பங்குகள் 4.23 சதவீதமும், ஆக்சிஸ் பங்குகள் விலை 3.59 சதவீதமும், எச்டிஎப்சி., நிறுவன பங்குகள் விலை 3.26 சதவீதமும், ஐசிஐசிஐ., பங்குகள் விலை 2.80 சதவீதமும் உயர்ந்து இருந்தன. இதுதவிர மாருதி சுசூகி(3.06%), எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் விலை 2.85 சதவீதம் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|