பதிவு செய்த நாள்
12 ஜூன்2014
00:46
மும்பை: தொலைத்தொடர்பு சேவை துறையில், வருவாய் சார்ந்த சந்தை பங்களிப்பில், பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செலுலார் ஆகிய மூன்று நிறுவனங்கள் பெரும் பான்மை பங்கை கொண்டுள்ளன.மேற்கண்ட பிரிவில், நடப்பாண்டு, ஜன., –மார்ச் வரையிலான காலாண்டில், இந்நிறுவனங்களின், பங்களிப்பு, 70.4 சதவீதமாக உள்ளது. இதில், பார்தி ஏர்டெல் 30.5 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், வோடபோன் இந்தியா (23.4), ஐடியா செலுலார் (16.6) ஆகியவை உள்ளன. அதே சமயம், கடந்த ஆண்டின் இதே காலாண்டு வருவாயுடன் ஒப்பிடும்போது, ஐடியா செலுலார் 0.90 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. பார்தி ஏர்டெல் 0.50 சதவீதமும், வோடபோன் 40 சதவீத வளர்ச்சியும் கண்டுஉள்ளன.சென்ற 2013–14ம் நிதியாண்டில், துறை சார்ந்த வருவாய் வளர்ச்சியில், மேற்கண்ட மூன்று நிறுவனங்களின் பங்களிப்பு, 91 சதவீதமாக உள்ளது. இதில், பார்தி ஏர்டெல் 35 சதவீதமும், மற்ற இரு நிறுவனங்கள், தலா, 28 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளன.22 தொலைத்தொடர்பு வட்டங்களில், பெரும்பான்மை இடங்களில், மேற்கண்ட மூன்று நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதே சமயம், 21 வட்டங்களில் டாட்டா டெலிகம்யூனிகேஷன் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி குறைந்துள்ளது.பீ.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, தலா, 18 வட்டங்களில் குறைந்துள்ளது.தனியார் துறையை சேர்ந்த மூன்று நிறுவனங்களின் வருவாய், வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், பல நிறுவனங்கள் இழப்பிலும், கடன் சுமையிலும் தள்ளாடி வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|