கோதுமை ஏற்றுமதியை நிறுத்த திட்டம் : தனியாருக்கு தடை இல்லைகோதுமை ஏற்றுமதியை நிறுத்த திட்டம் : தனியாருக்கு தடை இல்லை ... பங்கு சந்தையில் திடீர் வீழ்ச்சி பங்கு சந்தையில் திடீர் வீழ்ச்சி ...
தொலைத்தொடர்பு வருவாய்3 நிறுவனங்கள் ஏகபோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2014
00:46

மும்பை: தொலைத்தொடர்பு சேவை துறையில், வருவாய் சார்ந்த சந்தை பங்களிப்பில், பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செலுலார் ஆகிய மூன்று நிறுவனங்கள் பெரும் பான்மை பங்கை கொண்டுள்ளன.மேற்கண்ட பிரிவில், நடப்பாண்டு, ஜன., –மார்ச் வரையிலான காலாண்டில், இந்நிறுவனங்களின், பங்களிப்பு, 70.4 சதவீதமாக உள்ளது. இதில், பார்தி ஏர்டெல் 30.5 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், வோடபோன் இந்தியா (23.4), ஐடியா செலுலார் (16.6) ஆகியவை உள்ளன. அதே சமயம், கடந்த ஆண்டின் இதே காலாண்டு வருவாயுடன் ஒப்பிடும்போது, ஐடியா செலுலார் 0.90 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. பார்தி ஏர்டெல் 0.50 சதவீதமும், வோடபோன் 40 சதவீத வளர்ச்சியும் கண்டுஉள்ளன.சென்ற 2013–14ம் நிதியாண்டில், துறை சார்ந்த வருவாய் வளர்ச்சியில், மேற்கண்ட மூன்று நிறுவனங்களின் பங்களிப்பு, 91 சதவீதமாக உள்ளது. இதில், பார்தி ஏர்டெல் 35 சதவீதமும், மற்ற இரு நிறுவனங்கள், தலா, 28 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளன.22 தொலைத்தொடர்பு வட்டங்களில், பெரும்பான்மை இடங்களில், மேற்கண்ட மூன்று நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதே சமயம், 21 வட்டங்களில் டாட்டா டெலிகம்யூனிகேஷன் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி குறைந்துள்ளது.பீ.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, தலா, 18 வட்டங்களில் குறைந்துள்ளது.தனியார் துறையை சேர்ந்த மூன்று நிறுவனங்களின் வருவாய், வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், பல நிறுவனங்கள் இழப்பிலும், கடன் சுமையிலும் தள்ளாடி வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)