பதிவு செய்த நாள்
13 ஜூன்2014
01:44
பெங்களுர்:இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக, ஜெர்மனியின் எஸ்.ஏ.பி., நிறுவன முன்னாள் நிர்வாக உறுப்பினர் விஷால் சிக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது இப்பதவியில் உள்ள எஸ்.டீ.சிபுலால், ஓராண்டு முன்னதாக, வரும் ஜூலை 31ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
இதை தொடர்ந்து, விஷால் சிக்கா, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி பொறுப்பேற்பார் என, இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், இன்போசிஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக உள்ள நாராயணமூர்த்தி, நாளை அப்பொறுப்பில் இருந்து விலகி, அக்டோபர் 10ம் தேதி வரை, பணி சாரா செயல் தலைவராக நீடிப்பார்.அவர், அக்டோபர் 11ம் தேதி முதல், இன்போசிஸ் நிறுவனத்தின் கவுரவ தலைவராக செயலாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாராயணமூர்த்தியின் மகன், ரோஹன் மூர்த்தியும், இன்போசிஸ் நிறுவனத்தின் செயல் உதவியாளர் பொறுப்பில் இருந்து விலகுகிறார்.இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில், இரண்டாவது இடத்தில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்து, அண்மைக்காலமாக, பலர் விலகி வருகின்றனர். இதை தொடர்ந்து, இந் நிறுவன பங்கு விலை வீழ்ச்சி கண்டது.இதையடுத்து, இன்போசிஸ் நிறுவனத்திற்கு புத்துயிரூட்டும் நோக்கில், தலைமை பொறுப்பிற்கு, முதன் முதலாக, நிறுவனத்தை சாராத வெளிநபர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|