பதிவு செய்த நாள்
16 ஜூன்2014
01:07
புதுடில்லி:மொபைல் எண்ணை மாற்றாமல், இந்தியாவின் எந்த பகுதியிலும் விருப்பமான சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் திட்டத்திற்கு, தொலைத் தொடர்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் (டிராய்) கலந்தாலோசித்து, திட்ட அமலாக்க நாள், விரைவில் அறிவிக்கப்படும் என, தெரிகிறது.தற்போது, மொபைல் எண்ணை மாற்றாமல், சேவை நிறுவனங்களை மாற்றும் வசதி, தொலைத் தொடர்பு வட்டத்திற்குள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
உதாரணமாக, சென்னையில் உள்ள ஏர்டெல் சந்தாதாரர், மும்பைக்கு இடம் மாறினால், அங்கு அவர், மொபைல் எண்ணை மாற்றாமல், சேவை நிறுவனத்தை மட்டும் மாற்றும் வசதியை பெற முடியாது.தற்போது, இந்த கட்டுப்பாட்டை நீக்கி, இந்தியா முழுவதும் எந்த பகுதிக்கு மாறினாலும், அப்பகுதியில் உள்ள நிறுவனத்தின் மூலம், எண்ணை மாற்றாமல், மொபைல்போன் சேவையை பெறும் வசதிக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விரைவில் இது நடைமுறைக்கு வர உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|