ஐந்து மாதங்­களில் 267 லட்சம் பேர் விமான பயணம்ஐந்து மாதங்­களில் 267 லட்சம் பேர் விமான பயணம் ... ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.18 ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.18 ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சோயா விதை பற்­றாக்­கு­றையால் மகசூல் பாதிப்பு:எண்ணெய், தீவனம் விலை உய­ருமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2014
01:02

புது­டில்லி;சோயா விதை கிடைப்­பதில் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளதால், நடப்பு கரீப் பரு­வத்தில், அதன் நடவுப் பணி­களை விவ­சா­யிகள் முழு­மை­யாக மேற்­கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.
கரீப் பருவம்:இதனால், நடப்பு 2013–14ம் சோயா பரு­வத்தில் (அக்.,–செப்.,), நாட்டின் சோயா உற்­பத்தி, 1.19 கோடி டன்­னாக குறையும் என, மத்­திய வேளாண் அமைச்­சகம் மதிப்­பிட்­டுள்­ளது. கடந்த, 2012–13ம் சோயா பரு­வத்தில், சோயா உற்­பத்தி, 1.46 கோடி டன்­னாக இருந்­தது.புரதச் சத்து நிறைந்த சோயா உற்­பத்­தியில், மத்­திய பிர­தேசம் முத­லி­டத்­திலும், மகா­ராஷ்­டிரா இரண்­டா­வது இடத்­திலும் உள்­ளன.
நடப்­பாண்டு துவக்­கத்தில், மகா­ராஷ்­டி­ராவில் பெய்த ஆலங்­கட்டி மழையால், சோயா உட்­பட பல்­வேறு பயிர்கள் பாதிக்­கப்­பட்­டன. இதனால், சோயா பயி­ரி­டு­வ­தற்கு, போதிய அளவில் விதைகள் கிடைக்­காத நிலை ஏற்­பட்­டுள்­ளது.நாடு தழு­விய அளவில், சான்­ற­ளிக்­கப்­பட்ட தர­மான சோயா விதை­க­ளுக்­கான பற்­றாக்­குறை, 69,616 டன்­னாக இருக்கும் என, மத்­திய வேளாண் அமைச்­சகம் மதிப்­பிட்­டுள்­ளது. கரீப் பயி­ரான சோயாவின் விதைப்பு பணிகள், ஜூன் –­ ஜூ­லையில் நடை­பெறும். செப்., – நவம்பரில் அறு­வடை செய்­யப்­படும்.நடப்பு கரீப் பரு­வத்­திற்கு தேவை­யான, 3.43 லட்சம் டன் சோயா விதையில், 2.73 லட்சம் டன் தான் கிடைக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. சோயா விதையின் பற்­றாக்­கு­றை யால், அதன் விலை கிடு கிடு­வென உயர்ந்து வரு­கி­றது. கடந்த ஆண்டு, 50 ரூபாய்க்கு கிடைத்த, தர­மான, ஒரு கிலோ சோயா விதை, தற்­போது, 70 ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது என, விவ­சாயி ஒருவர் தெரி­வித்தார்.
சேமிப்பு:பெரும்­பா­லான விவ­சா­யிகள், கையி­ருப்பில் உள்ள கடந்த ஆண்டு விதை­களை நடப்பு பரு­வத்தில் பயன்­ப­டுத்­து­வது வழக்கம். ஆனால், சோயா விவ­சா­யிகள், கடந்த பரு­வத்து பயிர்­களின் விதை­களை சேமித்து பயன்­ப­டுத்­து­வ­தில்லை என்று கூறப்­ப­டு­கி­றது.சோயா விதை தட்­டுப்­பாடும், அதை தொடர்ந்து உற்­பத்தி குறையும் என்ற மதிப்­பீடும், சோயா பொருட்­களின் விலை உயர வழி வகுக்கும் என, அஞ்­சப்­ப­டு­கி­றது. தற்­போது, ஒரு குவிண்டால் (100 கிலோ) சோயா, 4,200 – 4,500 ரூபாய் என்ற விலையில் விற்­கப்­ப­டு­கி­றது.
சோயாவில் இருந்து தாவர எண்ணெய், மசகு எண்ணெய், கால்­ந­டை­க­ளுக்­கான சோயா புண்­ணாக்கு மற்றும் பல்­வேறு உணவுப் பொருட்கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. சோயா புண்­ணாக்கு விலை உயர்ந்தால், கோழிப் பண்ணை துறை பாதிக்­கப்­படும். சோயா பொருட்­களின் விலை உயர்வால் நுகர்­வோரும் பாதிக்­கப்­ப­டுவர்.
ஏற்றுமதி:சோயா புண்­ணாக்கு ஏற்­று­ம­தியை தற்­கா­லி­க­மாக கட்­டுப்­ப­டுத்­து­வதன் மூலம், உள்­நாட்டில் அதன் விலை உயர்வை ஓர­ளவு தடுக்க முடியும். இந்­தியா, ஆண்­டுக்கு, 20 லட்சம் டன் சோயா புண்­ணாக்கு ஏற்­று­மதி மேற்­கொண்டு, சர்­வ­தேச அளவில் ஐந்­தா­வது இடத்தில் உள்­ளது. ஐரோப்பா மற்றும் தென்­ கி­ழக்கு ஆசிய நாடு­களுக்கு, சோயா புண்­ணாக்கு அதிக அளவில் ஏற்­று­ம­தி­யா­கி­றது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)