பதிவு செய்த நாள்
21 ஜூன்2014
00:41
புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதம், தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், தேயிலை உற்பத்தி, 18.41 சதவீதம் குறைந்து, 1.65 கோடி கிலோவாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில்2.02 கோடி கிலோவாக இருந்தது.இதே காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தி, 24.48 சதவீதம் சரிவடைந்து, 7.51 கோடியில் இருந்து, 5.67 கோடி கிலோவாக குறைந்துள்ளது என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, இதே காலத்தில், 40.34 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 4.24 கோடி கிலோவிலிருந்து, 2.53 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது. இதன் காரணமாகவே, ஒட்டு மொத்த அளவில் நாட்டின் தேயிலை உற்பத்தி சரிவை கண்டுள்ளது.அதே சமயம், மேற்கு வங்கத்தின் தேயிலை உற்பத்தி, 21.58 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.10 கோடி கிலோவிலிருந்து, 1.34 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.
சென்ற 2013–14ம் நிதியாண்டில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 6.19 சதவீதம் அதிகரித்து, 120.54 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 113.50 கோடி கிலோவாக இருந்தது.உலகளவில், தேயிலை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|