பதிவு செய்த நாள்
22 ஜூன்2014
00:04
புதுடில்லி :சென்ற மே மாதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 9.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.21 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்தாண்டின் இதே மாதத்தில், 3.74 லட்சமாக இருந்தது.
நடப்பாண்டு ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாத காலத்தில், மொத்தம், 30.52 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்தியாவிற்கு வந்துள்ளனர்.இது, கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 6.6 சதவீதம் (28.63 லட்சம் பயணிகள்) அதிகமாகும்.சென்ற மே மாதத்தில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாயிலாக கிடைத்த அன்னியச் செலாவணி, 21.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,092 கோடியிலிருந்து, 7,403 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், இந்தியாவிற்கு வருகை புரிந்த பிறகு விசா பெற்றவர்களின் எண்ணிக்கை, 64.5 சதவீதம் உயர்ந்து, 1,114லிருந்து, 1,833ஆக அதிகரித்துள்ளது.நடப்பாண்டு ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாத காலத்தில், புதுடில்லி விமான நிலையம், அதிகபட்சமாக, 4,711 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்கு பிறகு, விசா வழங்கி உள்ளது.இந்த வகையில் அடுத்த இடங்களில் மும்பை (2,001 பேர்),சென்னை (1,249), பெங்களூரு (620), கோல்கட்டா (610), கொச்சி (293) ஐதராபாத் (258) மற்றும் திருவனந்தபுரம் (99 பேர்) ஆகிய நகரங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|