பதிவு செய்த நாள்
23 ஜூன்2014
00:43
தங்கம், மீண்டும் பாதுகாப்பான முதலீடாக உருவெடுக்கத் துவங்கியுள்ளது. சர்வதேசசந்தையில், தங்கம் தொடர்ந்து சரிவை கண்டு வந்ததால், அதன் மீதான முதலீட்டு வருவாய், இடர்பாட்டிற்கு உரியதாக கருதப்பட்டது.
அமெரிக்கா:இந்நிலையில், ஈராக் போர் பதற்றம், கச்சா எண்ணை விலை உயர்வு, உக்ரைன் சிக்கல், அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கை போன்ற சர்வதேச பிரச்னைகளால், சரிவில் இருந்த தங்கத்தின் மதிப்பு, தற்போது அதிகரித்துள்ளது.
இதன் தாக்கம், உள்நாட்டில் எதிரொலிக்க துவங்கியுள்ளது. கடந்த சில தினங்களில் தங்கம் விலை, 5.5 சதவீதம் உயர்ந்துள்ளது.கடந்த, 20ம் தேதி நிலவரப்படி, மும்பையில், 10 கிராம் தங்கம் விலை,2.1 சதவீதம் உயர்ந்து, 28,450 ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, மூன்று வாரங்களுக்கு முன், 26,900 ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 5.5 சதவீதம் அதிகரித்து, 1,244 டாலரில் இருந்து, 1,312 டாலராக உயர்ந்துள்ளது.
உள்நாட்டில், தங்கத்தை விட, வெள்ளியின் விலை, இதே காலத்தில், 10.89 சதவீதம் உயர்ந்துள்ளது. நடப்பு ஜூன், 5ம் தேதி, ஒரு கிலோ வெள்ளி, 40,850 ரூபாய்க்கு விற்பனையானது. இது, கடந்த 20ம் தேதி, 45,300 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கட்டுப்பாடு:இந்தியாவில், கடந்த ஆண்டு, தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளால்,அதன் வரத்து குறைந்துள்ளது. இதனால், நகை தயாரிப்பு நிறுவனங்கள், போதிய அளவிற்கு தங்கம் கிடைக்காமல், தவித்து வருகின்றன.எனினும், இறக்குமதியாகும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் உயர்மதிப்பு, 20 டாலர் என்ற அளவில் அதிகம் உயராமல் உள்ளது.
வட்டி விகிதம்:இதற்கு, மத்திய பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி, 2 சதவீதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பே காரணம் என, சந்தையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.சர்வதேச சந்தையில், வரும் நாட்களில் தங்கம் விலை கூடுவதும், குறைவதும் இரண்டு முக்கிய அம்சங்களை பொறுத்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி, பணவீக்க அடிப்படையில், வட்டி விகிதங்களை உயர்த்தாதவரை, தங்கம் விலை ஏற்றும் காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அது போன்று, ஈராக்கில் பதற்றம் அதிகரித்து, அதன் தாக்கம், அண்டை நாடுகளுக்கு பரவினால், கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும்.இதுவும், தங்கம் விலை உயர்வுக்கும், அது சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கவும் வழி வகுக்கும்.
கச்சா எண்ணெய்:கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தால், அது, இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்யும். நாட்டின் பணவீக்கம் உயரும். இந்த இரு அம்சங்கள் காரணமாக, ரூபாய் மதிப்பு மேலும் சரிவடையும். இதனால், இந்திய சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்ந்து, பாதுகாப்பான முதலீடு என்ற சிறப்பை தக்க வைத்துக் கொள்ளும்.பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து .
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|