வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்எண்ணிக்கை 4.21 லட்சமாக உயர்வுவெளிநாட்டு சுற்றுலா பயணிகள்எண்ணிக்கை 4.21 லட்சமாக உயர்வு ... பாதுகாப்பான முதலீடாக மீண்டும் உருவெடுக்கும் தங்கம் பாதுகாப்பான முதலீடாக மீண்டும் உருவெடுக்கும் தங்கம் ...
வர்த்தகம் » ஜவுளி
பருத்தி நுாலிழை இறக்குமதியை குறைக்க சீனா முடிவு : இந்திய நுாற்பாலைகளுக்கு பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2014
00:13

புதுடில்லி :சீனா, நடப்பு நிதியாண்டில், பருத்தி நுாலிழை இறக்குமதியை குறைக்க முடிவு செய்துள்ளதால், அந்நாட்டிற்கான இந்தியாவின் பருத்தி நுாலிழை ஏற்றுமதி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த சில ஆண்டுகளாக, கடுமையான பாதிப்பில் இருந்து, தற்போது மீண்டு வரும் இந்திய நுாற்பாலைகளுக்கு கவலையை அளித்துள்ளது.
கையிருப்பு:சீனா, உலக நாடுகளிடம் இருந்து அதிக அளவில் பருத்தியை இறக்குமதி செய்து வருகிறது. அவற்றில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. இந் நிலையில், அளவிற்கதிகமான பருத்தி கையிருப்பு மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், பருத்தி, பருத்தி நுாலிழை ஆகியவற்றின் இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கையில், சீனா ஈடுபட்டுள்ளது.
இதனால், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பருத்தி மற்றும் பருத்தி நுாலிழை ஏற்றுமதி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2008ம் ஆண்டு, சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதில் இருந்து, இந்திய நுாற்பாலைகள் கடுமையான போராட்டத்தை சந்தித்து வந்தன. இதனிடையே, பருத்தி விலை வீழ்ச்சி, மின் தட்டுப்பாடு போன்றவையும், நுாற்பாலைகளை கடுமையாக பாதித்தன. இதனால், நாடு தழுவிய அளவில், 380 நுாற்பாலைகள் மூடப்பட்டன. இதில், 70 சதவீதத்திற்கும் அதிகமான ஆலைகள், தமிழகம் மற்றும் குஜராத்தில் செயல்பட்டு வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாட்டின் பருத்தி உற்பத்தி அதிகரித்ததை அடுத்து, தென்னிந்தியாவில் மூடிக் கிடந்த நுாற்பாலைகள் புத்துயிர் பெற்றன. இத்துடன், மத்திய அரசு, கடந்த 2013–14ம் நிதியாண்டில் அறிவித்த, ஏற்றுமதி சார்ந்த ஊக்கத் தொகை திட்டமும், நுாற்பாலைகளை எழுச்சி காண வைத்தது. இதனிடையே, குஜராத் அரசு அறிவித்த, வட்டி மானிய திட்டமும், அம்மாநில நுாற்பாலைகளுக்கு ஊக்கமளித்தது.
புதிய சந்தை:இதை தொடர்ந்து, குஜராத்தில் மட்டும், 80 புதிய நுாற்பாலைகள் செயல் பாட்டிற்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இது போன்ற நிலையால், கடந்த நிதியாண்டில், பருத்தி நுாலிழை ஏற்றுமதி, 150 கோடி கிலோவாக உயர்ந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 111 கோடி கிலோவாக இருந்தது.
இந்நிலையில், சீனா, பருத்தி மற்றும் பருத்தி நுாலிழை இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது, புதிய விடியலை கண்ட இந்திய நுாற்பாலைகளின் வளர்ச்சிக்கு அணை போடுவது போல் அமைந்துள்ளது. இதனால், புதிய ஏற்றுமதி சந்தை களை அடையாளம் காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என, நுாலிழை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)