பதிவு செய்த நாள்
28 ஜூன்2014
00:11
மும்பை;சர்வதேச சந்தையில், விலை குறைந்த சோயா, சூரியகாந்தி எண்ணெய் வகைகளின் வரத்து அதிகரித்துள்ளதால், இந்தியாவின் பாமாயில் இறக்குமதி, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
சோயா எண்ணெய்:நடப்பு 2013–14ம் எண்ணெய் பருவத்தில்.(அக். –செப்.,),பாமாயில் இறக்குமதி, 8.4 சதவீதம் சரிவடைந்து, 76 லட்சம் டன்னாக குறையும் என, ஜி.ஜி.பட்டேல் அண்டு நிகில் ரீசர்ச் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இது, முந்தைய பருவத்தில், பாமாயில் இறக்குமதி, 83 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த, 2009 – 10ம் ஆண்டிற்கு பின், நடப்பு பருவத்தில் தான், இந்த அளவிற்கு பாமாயில் இறக்குமதி சரியும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம், நடப்பு பருவத்தில், சோயா எண்ணெய் இறக்குமதி, 62 சதவீதம் உயர்ந்து, 17.5 லட்சம் டன்னாகவும், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி, 49 சதவீதம் அதிகரித்து, 14.5 லட்சம் டன்னாகவும் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சோயா எண்ணெய் விலை குறைந்துள்ள தால், அதன் இறக்குமதி அதிகரித்துள்ளது.மலேசியா:அதேசமயம், இந்தியாவின் பாமாயில் இறக்குமதி குறைந்துள்ளதால், இந்தோனேஷியா மற்றும் மலேசியாவில் பாமாயில் கையிருப்பு அதிகரித்துள்ளது.
இதனால், மலேசியாவின் விளைபொருள் முன்பேர சந்தையில், பாமாயில் விலை, 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 15 சதவீதம் சரிவடைந்துள்ளது.இதனிடையே, ‘எல் நினோ’வின் பருவ நிலை மாற்றத்தால், இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில், எண்ணெய் பனை உற்பத்தி பாதிக்கப்பட்டு, பாமாயில் விலை, மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|