பதிவு செய்த நாள்
28 ஜூன்2014
00:21
புதுடில்லி:மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளில், 'பார்கோடு' தொழில்நுட்பம் இடம் பெறுவதற்கான காலக் கெடுவை, மத்திய அரசு, மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
ஒரு பொருளின் தயாரிப்பு முதல் விற்பனை வரை, அனைத்து கட்டங்களின் விவரங்களையும் அறிந்து கொள்ள, ‘பார்கோடு’ தொழில்நுட்பம்உதவுகிறது. இத்தொழில்நுட்பத்தை, மருந்து நிறுவனங்கள் அவற்றின் மருந்து புட்டிகள், மருந்து பெட்டிகள் உள்ளிட்ட, முதல் நிலை 'பேக்கிங்' ல், வரும் ஜூலை 1ம் தேதி முதல், பயன்படுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவை மறுதேதி அறிவிக்கப்படும் வரை ஒத்தி வைப்பதாக, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.பொதுமக்கள், உண்மையான மருந்துகளை எளிதில் கண்டறிந்து, போலியான, தரமற்ற மருந்துகள் வாங்குவதை தவிர்க்க, ‘பார்கோடு’ தொழில்நுட்பம் உதவும்.மேலும், மருந்துகளின் தரம் குறித்த விவரங்கள் காரணமாக, ஏற்றுமதியும் அதிகரிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|