பதிவு செய்த நாள்
01 ஜூலை2014
07:17
புதுடில்லி:மத்திய அரசு, வங்கி கணக்கு வைத்திராத 10 கோடி குடும்பங்களுக்கு, வங்கி கணக்கு துவக்கிக் கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.குக்கிராம மக்களும் வங்கிச் சேவையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளித்து வருகின்றன.இந்த வகையில், வங்கி கணக்கு இல்லாத குடும்பங்களும், வங்கி கணக்கு துவங்கும் வகையில், 'சம்பூர்ண் விட்டியா சம்வேஷன்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, இத்திட்டம் அறிமுகமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு இல்லாத ஒவ்வொரு குடும்பத்திலும், ஒரு பெண் உட்பட, இரு நபர்களுக்கு வங்கி கணக்கு துவக்கிக் கொடுக்கப்படும். இந்த வகையில், ஓராண்டில், மொத்தம் 20 கோடி வங்கிக் கணக்கு துவக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.வரும் செப்., 15க்குள், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் (பழங்குடி பகுதி, காடு, மலை, பாலைவனம் நீங்கலாக), வங்கிச் சேவைகளை விரிவுபடுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|