பதிவு செய்த நாள்
06 ஜூலை2014
14:33
ராமநாதபுரம் :இந்திய எண்ணெய், இயற்கை எரிவாயு கழகம் ( ஓ.என்.ஜி.சி.,) சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல், காஸ் உட்பட கனிம வளம் இருக்கிறதா என, கண்டறியும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,யின், ஆந்திராவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப பணியாளர்கள், ராமநாதபுரம் அருகே முகாமிட்டு பூமிக்கடியில் நிலக்கரி, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளனவா என, அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். இவர்கள் கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் ஒரு அடி ஆழத்திற்கு குழி தோண்டி, கனிம வளம் இருக்கிறதா? என, ஆய்வு செய்கின்றனர்.
ஓ.என்.ஜி.சி., சூப்பர்வைசர் பவுன்ராஜ் கூறியதாவது: சில ஆண்டுகளாக மழை இல்லாததால், இம்மாவட்டத்தில் நீரோட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இந்த நேரத்தில் பூமிக்கடியில் பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்கள் உள்ளனவா என, இலகுவாக கண்டறிய முடியும். இதற்காக, குழிதோண்டி 'சிங்க்' கருவியை பொருத்தி, குறைந்தது 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
இந்த கருவி பூமிக்கடியில் பல கி.மீ., தூரம் அதிர்வை பரப்புவதின் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் கனிம வளம் இருக்கிறதா என, கண்டறியப்படும். கனிமவளம் பற்றி அறிகுறி தெரிந்தால், ஓ.என்.ஜி.சி., தலைமையிடத்திற்கு உடனே தகவல் தெரிவிக்கப்படும். இதுவரை கண்டறிந்த சோதனையில் கனிமவளம் இருப்பதாக, தெரியவில்லை, என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|