பதிவு செய்த நாள்
06 ஜூலை2014
15:18
விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் 15 கிலோ டின் பாமாயில் விலை, ரூ.20 குறைந்த நிலையில், பருப்பு விலை உயர்ந்துள்ளது. சர்க்கரை, மைதா, ரவை விலையில் மாற்றமின்றி, கடந்த வார விலையிலே விற்கப்படுகின்றது.எண்ணெய் மார்க்கெட்டில், கடந்த வாரத்தைப் போல், கடலை எண்ணெய் (15 கிலோ டின்) 1,350, நல்லெண்ணெய் 3,200 , சன்பிளவர் எண்ணெய் 1,200 ரூபாய்க்கு விற்பனையானது. பாமாயில் டின்னுக்கு 20 ரூபாய் குறைந்து, 950 ரூபாயாக உள்ளது. 80 கிலோ நிலக்கடலை பருப்பு 4,300 ஆகவும் , 100 கிலோ கடலை
புண்ணாக்கு 4,100 ரூபாயாகவும் உள்ளது.100 கிலோ சர்க்கரை மூடை 3,275 ரூபாய், 90 கிலோ மைதா, 90 கிலோ ரவை தலா 3,040 ரூபாய் , 55 கிலோ பொரிகடலை, 2,410 ரூபாயாக உள்ளது. இவற்றின் விலைகளில் மாற்றமில்லை.
100 கிலோ பர்மா உளுந்தில் பொடிவகை 5,300, பருவட்டு 6,200, நாட்டு உளுந்து 6,700 ரூபாய்க்கு விற்பனையானது. 100 கிலோ உளுத்தம் பருப்பில், பர்மா பொடிவகை 6,900, பருவட்டு வகை 7,600, நாடு வகை 8,700 ரூபாய்க்கு விற்பனையானது. இவற்றின் விலை மூடைக்கு 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 100 கிலோ துவரம் பருப்பில், நாடுவகை 6,900, இரண்டாம் வகை 5,900, பொடி வகை 5,750 ரூபாய்க்கு விற்பனையானது. 100 கிலோ முதல் ரக பாசிப்பருப்பு 8,700, இரண்டாம் ரகம் 8,300 ரூபாயாக உள்ளது. இது மூடைக்கு 300 ரூபாய் உயர்ந்துள்ளது. 100 கிலோ முதல்ரக நாட்டு வத்தல் 6,000 முதல் 6,100 ரூபாய் வரையும், 2வது ரகம் 5,200 முதல் 5,500 ரூபாய் வரையும் விற்பனையானது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|