ரயில் கட்டணம் உயராது ; புல்லட் ரயில் அறிவிப்பு ; அந்நிய முதலீடுக்கு நடவடிக்கை - மோடி அரசின் ரயில்வே பட்ஜெட் தாக்கல்!ரயில் கட்டணம் உயராது ; புல்லட் ரயில் அறிவிப்பு ; அந்நிய முதலீடுக்கு ... ... பரு­வ­மழை பொய்த்­ததுநெற்பயிர் பரப்பு குறைந்­தது பரு­வ­மழை பொய்த்­ததுநெற்பயிர் பரப்பு குறைந்­தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் ஒரேநாளில் எழுச்சியும் - வீழ்ச்சியும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2014
16:55

மும்பை : பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பால் இந்திய பங்குசந்தைகள் ஒரேநாளில் எழுச்சியும் கண்டன, அதேசமயம் லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ததால் கடந்த 10மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி‌யும் கண்டன. இன்றைய வர்த்தகநேரம் துவங்கியபோதே நிப்டி முதன்முறையாக 7800 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. அதேப்போல் சென்செக்ஸ் 26,190 புள்ளிகளையும் தொட்டன. ஆனால் கடந்த சில நாட்களாக பங்குசந்தைகளில் காணப்பட்ட எழுச்சியினால் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்றதால் பங்குசந்தைகள் சற்று நேரத்திலேயே சரிந்தன. இறுதியில் சென்செக்ஸ் 515 புள்ளிகள் வீழ்ச்சி கண்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 517.97 புள்ளிகள் சரிந்து 25,582.11-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 163.95 புள்ளிகள் சரிந்து 7,623.20-ஆகவும் முடிந்தன. கடந்த 10 மாதங்களுக்கு பிறகு பங்குசந்தைகளில் இப்போது தான் ஒரேநாளில் இவ்வளவு பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 28 நிறுவன பங்குகள் விலை சரிந்து முடிந்தன. குறிப்பாக பெல்(8.16 சதவீதம்), என்டிபிசி., (5.36 சதவீதம்), டாடா பவர் (5.04 சதவீதம்) கோல் இந்தியா(4.96 சதவீதம்) ‌பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. இவை தவிர்த்து ஓஎன்ஜிசி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கெயில், எஸ்பிஐ., ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ போன்ற நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)