பதிவு செய்த நாள்
08 ஜூலை2014
16:55
மும்பை : பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பால் இந்திய பங்குசந்தைகள் ஒரேநாளில் எழுச்சியும் கண்டன, அதேசமயம் லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ததால் கடந்த 10மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியும் கண்டன. இன்றைய வர்த்தகநேரம் துவங்கியபோதே நிப்டி முதன்முறையாக 7800 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. அதேப்போல் சென்செக்ஸ் 26,190 புள்ளிகளையும் தொட்டன. ஆனால் கடந்த சில நாட்களாக பங்குசந்தைகளில் காணப்பட்ட எழுச்சியினால் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்றதால் பங்குசந்தைகள் சற்று நேரத்திலேயே சரிந்தன. இறுதியில் சென்செக்ஸ் 515 புள்ளிகள் வீழ்ச்சி கண்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 517.97 புள்ளிகள் சரிந்து 25,582.11-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 163.95 புள்ளிகள் சரிந்து 7,623.20-ஆகவும் முடிந்தன. கடந்த 10 மாதங்களுக்கு பிறகு பங்குசந்தைகளில் இப்போது தான் ஒரேநாளில் இவ்வளவு பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 28 நிறுவன பங்குகள் விலை சரிந்து முடிந்தன. குறிப்பாக பெல்(8.16 சதவீதம்), என்டிபிசி., (5.36 சதவீதம்), டாடா பவர் (5.04 சதவீதம்) கோல் இந்தியா(4.96 சதவீதம்) பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. இவை தவிர்த்து ஓஎன்ஜிசி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கெயில், எஸ்பிஐ., ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ போன்ற நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|