பதிவு செய்த நாள்
16 ஜூலை2014
17:31
மும்பை : பணவீக்கம் குறைந்ததில் இருந்தே பங்குசந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. இன்று(ஜூலை 16ம் தேதி) கடந்த இருவாரங்களில் இல்லாத அளவுக்கு பங்குசந்தைகள் ஏற்றம் கண்டன.
பணவீக்கம் குறைந்ததன் எதிரொலியாக ரிசர்வ் வங்கி, வீடு மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தல் தொடர்பாக சில தளர்வுகளை மேற்கொண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக வங்கி தொடர்பான பங்குகள் விலை ஏற்றம் பெற்றன. மேலும் நாட்டின் ஏற்றுமதியும் உயர்ந்ததால் பங்குசந்தைகள் நாள் முழுக்க எழுச்சியுடன் காணப்பட்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 321.07 புள்ளகள் உயர்ந்து 25,549.72-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 97.75 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 7600 புள்ளிகளை தாண்டி 7,624.40-ஆக முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி தொடர்பான பங்குகள் விலை 2.50 சதவீதமும், உலோகம் தொடர்பான பங்குகள் விலை 2.20 சதவீதமும், முதலீட்டு தொடர்பான பங்குகள் விலை 1.51 சதவீதமும், ஆட்டோமொபைல் தொடர்பான பங்குகள் 1.51 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|