பதிவு செய்த நாள்
26 ஜூலை2014
23:31
மும்பை:இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 18ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 4,879 கோடி ரூபாய் (81.32 கோடி டாலர்) அதிகரித்து, 19.07 லட்சம் கோடி ரூபாயாக (31,785 கோடி டாலர்) வளர்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 64 கோடி டாலர் உயர்ந்து, 31,704 கோடி டாலராக இருந்தது.ஆக, தொடர்ந்து ஏழு வாரங்களாக, அன்னியச் செலாவணி கையிருப்பு வளர்ச்சி கண்டு வருகிறது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 83 கோடி டாலர் உயர்ந்து, 29,105 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,063 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.கணக்கீட்டு காலத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 1 கோடி டாலர் வீழ்ச்சி கண்டு, 445 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் கையிருப்பு, 44 லட்சம் டாலர் குறைந்து, 171 கோடி டாலராகவும் சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி, மேலும் தெரிவித்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|