கடந்த வாரத்தில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு கடந்த வாரத்தில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு ... பரஸ்­பர நிதி திட்­டங்­களில்ரூ.1 லட்சம் கோடி முத­லீடு பரஸ்­பர நிதி திட்­டங்­களில்ரூ.1 லட்சம் கோடி முத­லீடு ...
தயாரிப்பு துறை உற்பத்தியில் குறு, சிறு நிறுவன பங்களிப்பு சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2014
04:00

புதுடில்லி: நாட்டின் மொத்த தயாரிப்பு துறை உற்பத்தியில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ.,) பங்களிப்பு, ஆண்டுக்காண்டு சரிவடைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதன்படி, நாட்டின் ஒட்டு மொத்த தயாரிப்பு துறை உற்பத்தியில், கடந்த 2007 – 08ம் நிதியாண்டில், எம்.எஸ்.எம்.இ.,ன் பங்களிப்பு, 41.98 சதவீதமாக இருந்தது.துணிகர முதலீடு:இது, 2008 – 09, 2009 – 10 மற்றும் 2010 – 11ம் நிதியாண்டுகளில் முறையே, 40.79 சதவீதம், 39.63 சதவீதம் மற்றும் 38.48 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, 2011 – 12ம் நிதியாண்டில், 37.52 சதவீதமாக மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இதையடுத்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு, ஆண்டுக்காண்டு சரிவடைந்து வருகிறது.குறிப்பாக, 2007 – 08ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், எம்.எஸ்.எம்.இ.,ன் பங்களிப்பு, 7.81 சதவீதமாக இருந்தது. இது, 2008 – 09, 2009 – 10 மற்றும் 2010 – 11ம் நிதியாண்டுகளில் முறையே, 7.52 சதவீதம், 7.49 சதவீதம், 7.42 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது.இது, கடந்த 2011 – 12ம் நிதியாண்டில், 7.28 சதவீதமாக மிகவும் குறைந்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு, எம்.எஸ்.எம்.இ., துறையை ஊக்குவிக்கும் வகையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.குறிப்பாக, இத்துறையில் அதிகளவில் முதலீட்டை ஈர்க்கும் வகையில், மத்திய பட்ஜெட்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், துணிகர முதலீட்டு நிதியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.சலுகை திட்டம்:இதுதவிர, சிறு தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த பல்வேறு சிறப்பு சலுகை திட்ட அறிவிப்புகளும், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையை ஊக்குவிக்கும் வகையில், 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 24 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, 11வது ஐந்தாண்டு திட்ட கால ஒதுக்கீட்டு தொகையுடன் ஒப்பிடுகையில், 133.53 சதவீதம் அதிகமாகும்.
தொழில் முனைவோர், வங்கி கடன் பெறுவதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மத்திய அரசு, இதனை கருத்தில் கொண்டு, தொழில்முனைவோர் வங்கி கடன் பெறுவதில் உள்ள நடைமுறைகளை எளிதாக்கவும், அவர்களுக்கு உரிய நேரத்தில் கடன் கிடைக்கவும், தேவையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என, எம்.எஸ்.எம்.இ., துறைக்கான மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா பார்லிமென்டில் தெரிவித்தார். எம்.எஸ்.எம்.இ., பிரிவில், நாடுதழுவிய அளவில், 3.61 கோடி நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 6.90 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)